tamilnadu

img

கர்தார்பூர்: சமாதான மண்டலம்! - களப்பிரன்

இந்தியாவில் உள்ள மதச் சார்பற்ற சக்தி கள் மதச்சார்பின்மையை வலியுறுத்தி பேசி னாலோ, அல்லது மத சிறுபான்மையினர் தங்கள்  உரிமைகள் பறிக்கப்படுவது குறித்து குரல்  கொடுத்தாலோ சங்கிகளிலிடமிருந்து ஒரு  எதிர்க்குரல், “நீங்க எல்லோரும் பாகிஸ்தா னுக்கு போங்க” என்று வன்மத்தோடு வரும். உண்மையில் பாகிஸ்தான் அரசு நம்மை வர வேற்க மட்டுமல்ல, சுற்றுலாவிற்குக் கூட அனு மதிக்க தயாராக இல்லை என்பது தான் யதார்த்தம்.  இந்தியர்களுக்கு சுற்றுலா விசா மறுக்கும் ஒரே நாடு பாகிஸ்தான் தான். ஆனாலும் அந்நாட் டிற்குள் விசா இல்லாமல் எல்லை தாண்டி பயணிக்க ஒரு இடத்திற்கு பாகிஸ்தான் அனுமதிக்கிறது. அது கர்தார்பூர் எனும் இடம் ஆகும். கர்தார்பூர் தற்போதைய  பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் நாரோ வல் மாவட்டத்தில் இருக்கிறது. கர்தாப்பூர்  இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்புற ஊராகும். சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக் அவர்கள் தனது வாழ்வின் கடைசி 18 ஆண்டுகள் இவ்வூரில்தான் வசித்தார்.  1539  செப்டம்பர் 22 இல் அவர் மறைந்த தும் இதே கர்தார்பூரில் தான். தற்போது அவரது  சமாதியும் இங்கு தான் இருக்கிறது. அவரது  சமாதி இருக்கும் இடத்திலேயே ஒரு குருத்வா ராவும் சீக்கியர்களால் எழுப்பப்பட்டு உள்ளது. கடந்த 485 ஆண்டுகளாக சீக்கியர்க ளின் புனிதத்தலங்களுள் ஒன்றாக கர்தார்பூர் இருந்து வருகிறது.

இக்குருத்துவாரா பாகிஸ்தான் நாட்டின் லாகூரிலிருந்து 120 கிமீ தொலைவிலும், இந்திய  நாட்டின் குர்தாஸ்பூர் மாவட்டம், தேரா பாபா நானக்கிலிருந்து 4 கிமீ தொலைவிலும் உள்ளது. இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கோட்டை பிரிக்கும் போது ராவி ஆற்றுக்கு மேற்குக் கரை  பகுதியை பாகிஸ்தானுக்கும், கிழக்குக் கரை  பகுதியை இந்தியாவிற்கும் என்று பிரித்தார்கள்.  மேற்குக் கரையில் இருக்கும் கர்தார்பூர் பாகிஸ் தான் வசமானது. 1947க்குப் பின்னர் கர்தார்பூர் செல்ல விரும்பிய இந்திய நிலத்தில் வாழும் சீக்கி யர்களுக்கு இந்தப் பயணமே பெரும் போராட் டமானது.  இந்திய விடுதலைக்குப் பின்னர் அமிர்தசரஸ்  அருகே உள்ள வாகா எல்லை வழியாகத்தான் பாகிஸ்தானுக்கு இந்தியர்கள் சென்று வர  இயலும். வாகா எல்லை வழியாக லாகூர் சென்று,  அங்கிருந்து கர்தார்பூர் செல்ல வேண்டும் என்றால் 125 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டும். அதோடு பாகிஸ்தானுக்கான விசா பெறு வதும் பெரும் போராட்டமாக இருந்தது. இதன் காரணமாக ராவி ஆற்றின் பாலத்தை  கடந்து  சீக்கியர்கள் சட்டவிரோத பயணத்தை மேற்கொண்டார்கள். 1965 இந்தியா - பாகிஸ்தான்  போர் வரை பாகிஸ்தான் அரசும் இதை கண்டும்  காணாமல் இருந்தது. அந்தப் போர் தொடங்கி யவுடன் ராவி ஆற்றின் பாலத்தை உடைத்த தோடு கண்காணிப்பையும் தீவிரமாக்கியது.

இதற்கு இடையே கர்தார்பூர் பகுதியை இந்தி யாவோடு இணைக்க குரல்கள் எழுந்தன. 1969 இல் குருநானக்கின் 500ஆவது பிறந்த நாளின்  போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி கர்தார் பூரை இந்தியாவின் ஒரு பகுதியாக மாற்ற  பாகிஸ்தானோடு பேசுவோம் என்று உறுதியளித் தார். ஆனால் அது நடைபெறவில்லை. 1974இல்  இந்தியா - பாகிஸ்தான் இடையிலான புனிதப் பயண அனுமதிப் பட்டியலில் கூட கர்தார்பூர்  இல்லை. இது 2005 வரை அவ்வாறே தொடர்ந்தது. இடையில் வாஜ்பாய் பிரதமராக இருந்த  போது இந்தப் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. ஆனால் அது கார்கில் போரால் நின்று போனது.  அதன் பின் நல்லெண்ண அடிப்படையில் 2000 ஆம் ஆண்டு வரை பூட்டிக்கிடந்த குருத்துவா ராவை அதன் பின் பாகிஸ்தான் அரசு செப்ப னிட்டது. அப்போதும் இந்திய சீக்கியர்கள் அங்கு  செல்ல அனுமதி இல்லாமல் இருந்தது. 2004 இல் மன்மோகன் ஆட்சி காலத்தில் மீண்டும் பேச்சு வார்த்தை தொடங்கியது. அப்போது வெளியுறவு  அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி ஒரு  யோசனையை முன் வைத்தார். இந்திய எல்லை யிலிருந்து 4.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள  குருத்வாராவுக்கு செல்ல விசா இல்லாமல் பாகிஸ்தானுக்குள் அனுமதிக்கும் திட்டத்தை முன் மொழிந்தார். இந்தியா - பாகிஸ்தான் சமா தான வழித்தடமாகவும், சமாதான மண்டலமாக வும் இது விளங்கும் என்ற பேச்சும் தொடர்ந்தது. 2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பின் அதுவும் தடைபட்டது. அதன் பின் 2010இல் இரண்டு அரசுகளும் இந்த சமாதான வழித்தடத்திற்கு முன்வந்தன. அதற்குரிய திட்டச் செலவாக 17 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிடப்பட்டது. 14.8 மில்லியன் டாலரை பாகிஸ்தான் அரசும், 2.2 மில்லியன் டாலரை இந்திய அரசும் ஏற்றுக் கொண் டது. அதனைத் தொடந்து  2019இல் குருநானக்கின் 550 ஆவது பிறந்த ஆண்டில்  அந்த வழித்தடம் திறக்கப் பட்டு இந்திய சீக்கியர்கள் தங்கள் புனிதப் பயணத்தை  விசா இல்லாமல் மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. இதன் சிறப்பு என்னவென்றால் சீக்கிய மதம்  அல்லாத இந்தியர்களுக்கும் இங்கு  சென்று வர அனுமதி உள்ளது. அதற்குக்  காரணம் சீக்கிய சமயத்தின் மத ஒற்றுமைக் கோட்பாடு தான். 

சீக்கிய மதத்தை உருவாக்கிய கு ருநானக் அதன் கொள்கையாக “இந்து நூல்கள்,  குரான் இரண்டிலுமே உண்மைகள் இருக்கின்றன” என்று சொன்னார்.  “இரண்டையும் சேர்த்தே மக்கள் பின்பற்றலாம்” எனவும் கூறினார். “இந்துக்களையும் முசுலீம்களையும் ஒற்றுமையாக வாழ வைப்பதே தன் நோக்கம்” என்றும் கூறினார். “இராமன், கிருஷ்ணன், நபிகள்  உள்ளிட்ட எல்லோருமே  இறைவனின் தூதர்கள்” என்றும் கூறினார்.  “உலக வாழ்க்கையைத் துறந்த துறவியையும், இல்லற வாழ்க்கை கொண்ட மனிதரையும் கடவுள்  ஒன்றாகவே பாவிப்பார்” எனவும் கூறினார். பாகிஸ்தானிய எழுத்தாளர் ஒருவர் சொன்னார். “எங்கள் நாட்டு மக்களின் 1947க்கு மு ன்பான வரலாறு இந்தியா தானே” என்று சொன் னார். அது நமக்கும் பொருந்தும் தானே. 1947க்கு  முன்பு இந்திய நாட்டின் வரலாறும் பாகிஸ்தா னோடு சேர்ந்தது தானே.