சென்னை,மார்ச் 9- ஆன்லைன் விளையாட் டுக்கு தடை செய்து மீண்டும் மசோதா இயற்றினால் ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும் என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். ஆன்லைன் ரம்மி உள் ளிட்ட விளையாட்டுகளை தடை செய்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் ரம்மி விளை யாடி பணத்தை இழந்து 44 பேர் தற்கொலை செய்து கொண்ட பிறகும் பொது மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் அந்த மசோதா வுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தராமல் இழுத் தடித்து வந்தார். அந்த மசோ தாவை மாநில அரசுக்கே திருப்பி அனுப்பிய அவர் ஒன்றிய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற்றலாம் என்பன உள்ளிட்ட 8 கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத் தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற் கான சட்டத்தை இயற்ற சட்டமன்றத்திற்கு உரிமை உள்ளதாக நீதி மன்றம் கூறியுள்ளது. பழைய சட்டத்திலுள்ள குறைபாடு களை சரி செய்து புதிய சட்டம் இயற்றலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் இதற்கு அதிகா ரம் இல்லை என்று ஆளுநர் எப்படி திருப்பி அனுப்பி யிருக்கிறார் என்று தெரிய வில்லை. இது தொடர்பான கோப்பு களை படித்து விட்டு தெளி வான பதிலை முதல்வர் அளிப்பார். இப்போது தான் ஆளுநர் முதல் முறையாக திரும்பி அனுப்பியுள்ளார். இதற்கு முன்னதாக சில கேள்விகள் கேட்டார். அதற்கு அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. 2வது முறை சட்டத்தை நிறை வேற்றி அனுப்பினால் அவர் ஒப்புதல் அளிக்க வேண் டும். மறுப்பு தெரிவிக்க அவருக்கு வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறி னார்.