அருமனை, அக்.23 கன்னியாகுமரி மாவட்டம் அரு மனை அருகே முழு கோட்டில் தோழர் துளசிதரன் நினைவு தின பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாணவர் பருவத்திலிருந்து இந்திய மாணவர் சங்கத்திலும் வாலிபர் சங்கத்தி லும் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கட்சி யிலும் பணியாற்றி முழுக்கோடு ஊரா ட்சியில் தொடர்ச்சியாக 3 முறை ஊராட்சி தலைவராக வெற்றி பெற்று பின்பு மாவட்ட ஊராட்சி உறுப்பின ராகவும் வெற்றி பெற்றவர் துளசிதரன். வழக்கறிஞராகவும், சிறந்த ஒரு கம்யூ னிஸ்டாகவும் மக்கள் பணி செய்த தோழர் துளசிதரன் அவர்களின் 9 ஆவது ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் முழுக்கோடு சந்திப்பில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முழுக்கோடு ஊராட்சி தலைவர் மரியசெல்வி விலாசினி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற உறுப்பினர் டேவிட் வரவேற்று பேசினார். மேற்புறம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரும் அருமனை வட்டார அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் செயலாளருமான டி.பேபி, அருமனை வட்டார செயலாளர் சசி குமார், மாநில குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜய மோகன் மற்றும் கேரளா மாநில குழு உறுப்பினரும் கண்ணூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான பி.ஜெயராஜன் ஆகி யோர் உரையாற்றினார்கள். ஜெயராஜன் உரையாற்றும் போது, மத்தியில் ஆளுகின்ற பாஜக பாசிச அரசாங்கமானது சாதாரண ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கொள்ளையடித்து பெரும் முதலாளி களுக்கு அடகு வைக்கிறது. கார்ப்ப ரேட் நிறுவனங்களை ஊக்குவிக் கிறது. சலுகைகளை கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு அள்ளிக் கொடுக்கிறது. பெரும் முதலாளிகளை மேலும் மேலும் கொழுக்க வைக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் விற் பனை செய்து அதில் வரக்கூடிய லாப த்தை ஈட்டி கட்சியை வளர்க்கிறது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைத்து தரப்பு மக்களின் உரிமை களும் சுதந்திரமும் பறிக்கப்படும் என்ப தில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. எனவே வரக்கூடிய நாடாளுமன்ற தேர்த லில் பாஜகவை தோற்கடிக்கஅனைத்து மக்களும் ஒன்று திரள வேண்டும்.தோழர் துளசிதரன் விட்டு சென்ற பணி களை முன்னெடுத்துச் செல்வோம். மக்களுக்காக வலுவாக இயக்கம் நடத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யுடன் இணைந்து செயல்பட வேண்டும்” என்றார். அனுமோன்நன்றி கூறினார்.