சென்னை, அக். 27 - ‘வந்தே பாரத்’ ரயில் தயாரிப்பை, ஒன்றிய பாஜக அரசு தனியார் பன்னா ட்டு நிறுவனத்திற்கு வழங்கியிருப்ப தற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை யில் ஐசிஎப் தொழிலாளர்கள் பெருந்தி ரள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 68 வருட பாரம்பரியம் மிக்க இந்திய நாட்டின் முதல் ரயில் பெட்டி தொழிற்சாலையாக சென்னை ஐ.சி.எப். (ICF) தொழிற்சாலை உள்ளது. வளரும் நாடுகளுக்கும், உள்நாட்டி ற்கும் தேவையான புதிய ரயில் பெட்டி களை தயாரித்து வழங்கி வருகிறது. தற்போது பன்னாட்டு ரயில் பெட்டிகளுக்கு நிகராக உலகத் தரம் வாய்ந்த வகையில், ‘வந்தே பாரத்’ ரயில் வண்டியையும் மிகக் குறைந்த விலையில் தயாரித்து வழங்கி வருகிறது. ‘வந்தே பாரத்’ ரயிலை முழுமை யாக வடிவமைப்பு செய்து ரூ. 70 கோடி ரூபாய் என்ற திட்டச் செலவில் ஐசிஎப் தயாரித்து வழங்கி வருகிறது. இதன் அடுத்தகட்டமாக படுக்கை வசதி கொண்ட ‘வந்தே பாரத்’ ரயிலை உரு வாக்கும் பணியில் ஐசிஎப் ஈடுபட்டு வந்தது.
‘டிடாகர் வேகன்’ பன்னாட்டு நிறுவனத்திற்கு காண்ட்ராக்ட்
இந்நிலையில்தான், அந்த படுக்கை வசதி கொண்ட ‘வந்தே பாரத்’ ரயில் தயாரிப்புப் பணிகளை ‘டிடாகர் வேகன்’ என்கின்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறு வனத்திற்கு ஒன்றிய பாஜக அரசு வழங்கியுள்ளது. 200 ரயில்கள் தயாரி ப்பையும், அவற்றின் 35 வருடத்திற்கான ரயில் பராமரிப்பையும் மோடி அரசு தூக்கிக் கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அந்த பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனம், தங்க ளது தொழிற்சாலையில் ரயில் பெட்டி களைப் தயாரிக்கப் போவதில்லை. ஐசிஎப் வளாகத்திலேயே இந்த பணி களை மேற்கொள்ளப் போகிறது. டிடாகர் வேகன் நிறுவனத்திற்கு இடம், மின்சாரம், கேஸ், தண்ணீர், வடி வமைப்பு என அனைத்தையும் மோடி அரசு இலவசமாக வழங்க உள்ளது. பறிபோகும் 65 ஆயிரம் நிரந்தர வேலைவாய்ப்பு இவ்வளவு சலுகைகளுடன், 200 ரயில்கள் தயாரிக்கும் காண்ட்ராக்ட்டை மோடி அரசு வழங்கியும், ஒரு ரயிலுக்கு ‘டிடாகர் வேகன்’ நிறுவனம் ரூ. 130 கோடி விலை வைத்துள்ளது. இது ஐசிஎப் தயாரிப்பு விலையை விட ரூ. 60 கோடி அதிகமாகும். ஒட்டு மொத்தமாக ரூ. 10 ஆயிரம் கோடி கூடுத லாக கொடுத்து ரயில்களை வாங்க உள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் பொதுத் துறை நிறுவனத்தின் வருவாய் பறி போவது மட்டுமன்றி 65 ஆயிரத்து 510 நிரந்தர வேலை வாய்ப்புகளையும் மோடி அரசு பறிக்க உள்ளது. மேலும் மக்களின் வரிப்பணத்திலிருந்து ஒவ்வொரு ரயிலுக்கும் ரூ. 60 கோடி விகிதம் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை சூறையாட உள்ளது.
ஒப்பந்தத்தை ரத்து செய்ய தொழிலாளர்கள் கோரிக்கை
இந்நிலையிலேயே, இந்த நாசகர ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், ரயில் தயாரிப்பு காண்ட்ராக்ட்டை ஐசிஎப் நிறுவனத்திற்கே வழங்க வேண்டும், 2 ஆயிரம் காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி வெள்ளியன்று (அக்.27) ஐசிஎப் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு பெருந்திரள் அமர்வுப் போராட்டம் நடை பெற்றது. சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், போராட்டத்தை ஆதரித்துப் பேசினார். “பொதுத் துறை, அத்தியாவசிய துறைகளில் ஆட்சியாளர்கள் தனியாரை அனு மதிக்கின்றனர். தனியாருக்கு கொடுக்கக் கூடாத மின்சாரம், துறை முகம், ரயில்வே, தளவாட உற்பத்தி யிலும் தனியாரை அனுமதிக்கின்றனர். அரசின் கட்டுப்பாட்டில் சில துறைகள் இருந்தால்தான், தனியார் தவறு செய்யும் போது அதைத் தடுக்க முடியும்” என்று சவுந்தரராசன் கூறினார்.
மக்கள் உணரும்போது அதிகாரம் பறிபோகும்
“பொதுத்துறைகளில் உள்ள நிரந்தர தொழிலாளர்களை வெளி யேற்றிவிட்டு, தனியாரை உள்ளே கொண்டு வருகின்றனர். இந்தியாவின் கோவில்கள், பாதுகாப்பு அரண் என்று போற்றப்பட்ட பொதுத்துறைகளை விற்று வருகின்றனர். அனைத்து கட்டமைப்பு வசதிகள் இருந்தும், ஐசிஎப்-ல் உற்பத்தி செய்யாமல் கூடுதல் செலவில் தனியார் மூலம் உற்பத்தி செய்வது ஏன்? நாட்டிற்கு ஏற்ப ட்டுள்ள பொதுவான ஆபத்தில் ஒரு பகுதிதான் ஐசிஎப்-பிலும் தற்போது நிகழ்கிறது. ஆட்சியாளர்களை மக்கள் புரிந்து கொள்ளும்போது, அதிகாரம் பறிபோகும்” என்றும் சவுந்தரராசன் எச்சரித்தார். போராட்டத்தின் நிறைவாக நாடாளு மன்ற உறுப்பினர்கள் வி. கலாநிதி வீராசாமி, ஆர். கிரிராஜன் ஆகியோர், போராட்டக்குழு நிர்வாகிகளுடன் சென்று, ஐசிஎப் பொதுமேலாளர் பி.ஜி. மல்லய்யாவைச் சந்தித்து மனு அளித்தனர். முன்னதாக போராட்டத்திற்கு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பி.மோகன் தாஸ் தலைமை தாங்கி னார். இந்த போராட்டத்தை ஆதரித்து எச்எம்எஸ் தலைவர் சி.ஏ. ராஜாஸ்ரீதர், எஸ்ஆர்இஎஸ் பி.எஸ். சூரியபிரகாசம், பிஎம்எஸ் அமைப்பு செயலாளர் எஸ். துரைராஜ், ஏடிபி தலைவர் தாடி மா. ராசு ஆகியோர் பேசினர். போராட்டக் குழு பொருளாளரும், ஐசிஎப் யுனை டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) கவு ரவ தலைவருமான எஸ். இராம லிங்கம், பொதுச் செயலாளர் பா. ராஜா ராமன், ஏஐடியுசி பொதுச் செய லாளர் சரவணன், மினிஸ்டீரியல் அசோ சியேஷன் பொதுச் செயலாளர் ராஜ்குமார், இந்தியன் ரயில்வே சூப்பர் வைசர் கவுன்சில் செயலாளர் கார்த்திக், அகில இந்திய ஓபிசி அசோ சியேஷன் பார்த்தசாரதி, டெக்னிக்கல் சூப்பர் வைசர் அசோசியேஷன் செய லாளர் கோபிநாத், ஐசிஎப் அண்ணா தொழிற்சங்க பேரவை பொதுச் செய லாளர் எ.கே. கணேஷ்குமார், திமுக ஐசிஎப் லேபர் யூனியன் பொதுச் செய லாளர் வ. முரளிதரன், ஐசிஎப் மஸ்தூர் சங்- என்.எப்.ஐ.ஆர் அகில இந்திய ஒர்க்கிங் கமிட்டி உறுப்பினர் வெங்கட் ராவ், ஐசிஎப் லேபர் யூனியன் ஏ.ஐ. ஆர்.எப் அவைத் தலைவர் டி.மனோ கரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.