tamilnadu

img

நான் விகடனுக்குத் துணை நிற்கிறேன் : அருந்ததி ராய்

நான் விகடனுக்குத் துணை நிற்கிறேன் : அருந்ததி ராய்

விகடன் இணையதளம் முடக்கப் பட்டதற்கு எதிர்க்கட்சிகளும், ஊடக வியலாளர்களும், அரசியல் கட்சி களும், கருத்துரிமைக்கான குரல் ஒடுக்கப்படுவதாக மோடி அரசை விமர்சித்து கண்டனங்களைப் பதி விட்டு வருகின்றனர். இந்நிலையில், “நான் ஆனந்த விகட னுக்குத் துணை நிற்கிறேன்” என  சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாள ருமான அருந்ததி ராய் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் கூறுகையில், “நம் அரசாங்கம், சட்டத்துக்குப் புறம் பான வகையில் கருத்து சுதந்திரத்து க்கு எதிராகச் சென்றால், போராடவே வாய்ப்பளிக்காமல் கருத்துகளை ஒடு க்கினால், அதற்கு நாம் அனுமதித் தால், அவர்கள் நம் குரல்களை எடுத்து விடுவார்கள்; நம்மை கூண்டில் அடைத்து சாவியையும் தூர எறிந்து விடுவார்கள்.

நம் குழந்தைகள் ஏதும் அறியாத கைப்பாவைகள் ஆகிவிடு வார்கள். ஒரு தேசமாக நாம் தடம் புரண்டுவிடுவோம், தேக்கநிலையை அடைந்துவிடுவோம். நான் ஆனந்த விகடனுக்குத் துணை நிற்கிறேன்!” எனப் பதிவிட்டிருக்கிறார்.