தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து கொல்கத்தா மாநிலம் ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் திடீரென புகை வந்ததால் வராங்கல் அடுத்த நெல்கொண்டா ரயில் நிலையம் அருகே பாது காப்பு கருதி ரயில் நிறுத்தப்பட்டது. தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள் ஆய்வு செய்து ரயில் சக்கர பிரேக் கில் ஏற்பட்ட பழுது காரணமாக புகை வந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் பழுதான ரயில் சக்கரத்தின் பிரேக் சரிசெய்யப்பட்டு ரயில் மீண்டும் இயக்கப்பட்டது.