tamilnadu

img

தூக்கு மேடை தியாகி பாலு 72 ஆவது நினைவு தினம்

மதுரை, பிப்.22-   தூக்கு மேடை தியாகி பாலு அவர்களின் 72 ஆவது நினைவு தினம் பிப்ரவரி 22 புதனன்று கடைப்பிடிக்கப்பட்டது. அவரது நினைவு தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் - புறநகர் மாவட்டக்குழுக்கள் சார்பில் மகபூப்பாளையத்தில் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. இராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா. விஜயராஜன், எஸ். பாலா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜா.நரசிம்மன், இரா. லெனின், எம். பாலசுப்பிரமணியம், வை. ஸ்டாலின், ஆர்.சசிகலா, ஜெ. லெனின், எஸ். அழகர்சாமி, டி. செல்வா, மாநகராட்சி  துணை மேயர் டி. நாகராஜன், மாமன்ற உறுப்பினர்கள் டி. குமரவேல், வை. ஜென்னியம்மாள் மற்றும் தியாகி பாலுவின் பேரன்  ஹோசிமின் பாலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.