tamilnadu

img

கூட்டுறவு வங்கிகள் மூலம் வீட்டுமனை கடன்

சென்னை, ஏப்.7- சட்டப்பேரவையில் கூட்டு றவு துறையின் கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்தபோது அமைச்சர் கூறியதாவது:- கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கீழ் இத்துறை யின் நேரடி கட்டுப்பாட்டில் தற்போது 7,580 கூட்டுறவு சங்கங்கள்  (தொடக்க சங்கங் கள் 7,446, மத்திய சங்கங்கள் 127 மற்றும் 7 தலைமை சங்கங்கள்)  மாநிலம் முழுவது  செயல்படுகின்றன. மேலும், 4,453 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் 151  கிளைகளுடன் 12,525 கிராம ஊராட்சிகளில் பரந்து விரிந்த கட்டமைப்புகளுடன் செயல்படுகின்றன.  நியாயவிலை கடைகள்  பொதுவாக மக்களுக்கு உரிய காலத்தில் மற்றும்  சீரான முறையில் அத்தியாவ சியப் பொருட்களை விநி யோகம் செய்யப்படு வதை உறுதி செய்வதற்கும் மக்களின் உண்மையான மற்றும் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், மாநிலம் முழு வதும் கடந்த இரண்டு காலத் தில் 183 முழுநேர நியாய விலைக் கடைகள் மற்றும் 514 பகுதி நேரக் கடைகள் உட்பட 697 கடைகள் புதிதாக  திறக்கப்பட்டுள்ளன.   74 முழுநேர கடைகளுக் கும் 41 பகுதி நேர கடைக ளுக்கும் புதிதாக சொந்த  கட்டடங்கள் கட்டப்பட்டுள் ளன. கடலூர், தருமபுரி, காஞ்சி புரம், கிருஷ்ணகிரி, ராமநாத புரம், திருப்பூர், திருவண்ணா மலை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல் படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் நடந்த விவாதத் தின்போது கூட்டுறவு சங்கத் தேர்தல் குறித்து அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜூ எழுப்பிய கேள்விக்கு பதில்  அளித்த அமைச்சர் பெரிய கருப்பன்,“ அதிமுக ஆட்சியின் போது நடந்த கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடுகள் குறித்து 7 ஆயிரத்திற்கும் மேற் பட்ட புகார்கள் வந்தன. இது குறித்து வழக்கு  தொடரப்பட் டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் முடிந்த பிறகு,  தேர் தல் நடத்தப்படும் என்றார். பிறகு புதிய அறிவிப்பு களை வெளியிட்ட அமைச்சர், “மலைவாழ் மக்கள் மற்றும்  பழங்குடியினர் மேம்பாட்டிற் காக 9 இடங்களில் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்படும். கூட்டுறவு வங்கிகளின் மூலம்  வீட்டுமனை வாங்க கடன் உதவி வழங்கப்படும். நாட்டுப் புற கலைஞர்கள், பாரம்பரிய கலைப் பொருட்கள் தயாரிக்கும் பணியில் உள்ள வர்களுக்கு கூட்டுறவு வங்கி கள் மூலம் சிறப்பு கடன் உதவி  வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகள் மூலம் மூத்த  குடிமக்களுக்கு மறு அடமா னக் கடன் வழங்கப்படும்.  கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறும் உறுப்பினரின் வயது உச்சவரம்பு 60 வயதி லிருந்து 70 வயதாக உயர்த் தப்படும். சென்னை கொரூக்குப் பேட்டை, அம்பத்தூர், குன்றத் தூர், தாம்பரம் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய 5 இடங்களில் தமிழ்நாடு மாநில தலைமை  கூட்டுறவு வங்கியின் கிளைகள் புதிதாக துவங்கப்படும். கூட்டு றவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் 5 ஆயிரம் நியாய விலைக்கடைகளை மேம் படுத்தி ஐஎஸ்ஓ தரச்சான்று பெறப்படும்.