tamilnadu

சிறு, குறுந்தொழிலுக்கு தனி வேலைவாய்ப்பு முகாம் நடத்திடுக: சாடியா அமைப்பு கோரிக்கை

சென்னை, டிச. 21- சிறு மற்றும் குறுந்தொழிலுக்கு மட்டுமே தமிழக அரசு தனியார் துறைக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்த வேண்டும் என சாடியா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு சிறு மற்றும் குறுந் தொழில் முனை வோர் சங்கத்தின் (சாடியா) ஒருங்கிணைப்பாளர் கே.கிருஷ்ண சாமி கூறுகையில், மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. சமீபத்தில் கூட தமிழக அரசு, திருவள்ளுவர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்  தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஆவடி அருகே பருத்திபட்டில் வேலைவாய்ப்பு முகாமை நடத்தின.

இந்த முகாமை அமைச் சர் சி.வி.கணேசன், பால்வளத் துறை அமைச்சர் ச.மூ.நாசர் ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமில் 14,813 வேலை வாய்ப்புக்காக, 148 நிறுவனங்கள் பதிவு செய்திருந்தன. அதேபோல் 20 பெரிய பயிற்சி நிறுவனங்களும் கலந்து கொண்டனர். சிறப்பான நிகழ்ச்சியாக நடைபெற்றது, மிகவும் பாராட்டக்கூடியது, தமிழக  அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் பன்னாட்டு நிறுவ னங்களும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும், சிறு, குறு நிறு வனங்களும் ஒரே இடத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதால், வேலை தேடு பவர்கள் பெரிய நிறுவனத்தை தேடி செல்வது இயற்கையே. எனவே அதிகமான எண்ணிக்கை கொண்ட, வேலை வாய்ப்பு அளிக் கக்கூடிய, சிறு மற்றும் குறுந் தொழில்களுக்கு மட்டுமே மாவட்ட அளவில் தனியாக வேலை வாய்ப்பு முகாம் நடத்துவது இன்னும் சிறப்பாக அமையும் என்று அவர் கூறியுள்ளார்.