tamilnadu

img

மித்தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கும் குவாரி உரிமையாளர்கள் உயர் நீதிமன்றம் வேதனை

மித்தாயின் மார்பை அறுத்து  ரத்தம் குடிக்கும் குவாரி உரிமையாளர்கள் உயர் நீதிமன்றம் வேதனை

சென்னை, ஜூன் 7 - தீராத பேராசை கொண்ட குவாரி உரிமை யாளர்கள், பூமித் தாயின் மார்பை அறுத்து  ரத்தம் குடிக்கின்றனர் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. குவாரி உரிமம் முடிந்த நிலையிலும், குவாரியை வெட்டி எடுத்த கோவை குவாரி  உரிமையாளர் செந்தாமரைக்கு ரூ.32.29 கோடி அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்த  வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் சனிக் கிழமை (ஜூன் 7) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் குவாரி நடத்த உரிமையில்லை. சட்டவிரோதமாக எடுத்த  கனிமத்துக்கு அபராதம் செலுத்த வேண்டும்  என்று அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. அபராதம் விதிப்பை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவர்த்தி, தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள் பூமித்  தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கின்ற னர். பேராசைக்காரர்களிடம் இருந்து பூமியைக் காக்கவே சுற்றுச்சூழல் பாதுகாப்புச்  சட்டம் உள்ளது. குவாரி மூடப்பட்டதாக அறிக்கை தந்துவிட்டு, மறுபுறம் குவாரி செயல்பட அதிகாரிகள் அனுமதி அளித்திருக் கிறார்கள். குவாரி உரிமம் 2023 இல் முடிந்ததால், அதை ரத்து செய்ய வேண்டிய அவசியம் தற்போது இல்லை. இந்த வழக்கில் இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலை மைச் செயலரின் நடவடிக்கை பாராட்டுக்குரி யது. குவாரி மோசடியில் அதிகாரிகள் பங்கு  குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க  வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.