இன்று முதல் கனமழை
சென்னை: அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள உயரழுத்த காற்றுகள் இணையும் வாய்ப்புள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் வியாழ னன்று முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வா ளர்கள் தெரிவித்துள்ளனர். மே 10 முதல் படிப்படியாகவும், மே 12 லிருந்து மேலும் கூடுதலாகவும் மழை பெய்யத் தொ டங்கும். மே 15 அன்று கனமழை பெய்யும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.
மே 15-இல் மலர் கண்காட்சி
உதகை: உதகை மலர் கண்காட்சி மே 15 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெறும் என்று நீலகிரி ஆட்சியர் லட்சுமி அறிவித்துள்ளார். பிரசித்தி பெற்ற உதகை மலர் கண்காட்சியின் தேதி மாற்றம் செய்யப்பட்டு, 5 நாட்களுக் குப் பதில் 10 நாட்கள் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
ஜெ. உதவியாளரிடம் விசாரணை
கோவை: நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017 இல் நடந்த கொலை, கொள்ளை வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றனுக்கு, கோவை சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி, காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பூங்குன்றன் செவ்வாயன்று ஆஜரானார். அவரிடம் எஸ்.பி. மற்றும் கூடுதல் எஸ்.பி. தலைமையிலான போலீசார் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரித்தனர்
கலைக் கல்லூரியில் சேர்க்கை
சென்னை: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு மே 7 முதல் 27 ஆம் தேதி வரையில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான இணையதளப் பதிவை அமைச்சர் கோவி. செழியன் துவக்கி வைத்தார். தமிழ்நாட்டில் 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 159 பாடப்பிரிவுகளில் 1,23,345 சேர்க்கை இடங்கள் உள்ளன. அதில் சேர்வதற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க ஒருங்கிணைந்த இணைய தளமான https://www.tngasa.in மூலம் பதிவு செய்யலாம். தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
போர் பதற்றம்: விமானங்கள் ரத்து
சென்னை: பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள தீவிரவாதிகள் முகாம் மீது, இந்திய படைகள் புதனன்று அதிகாலை தாக்கு தல் நடத்தின. இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரண மாக சென்னையில் இருந்து சண்டிகருக்கு செல்ல-வர இருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பதவிக்காலம் நீட்டிப்பு
சென்னை: தற்போது சிபிஐ இயக்குநராக உள்ள பிரவீண் சூட் மே 25 ஆம் தேதியுடன் தனது இரண்டு ஆண்டு கால பதவிக் காலத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில், அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
சிலை ஏலம் தடுத்து நிறுத்தம்
நாகை: நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகழூரில் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட தொன்மை வாய்ந்த கண்ணப்ப நாயனார் சிலை, நெதர்லாந்தில் இருப்பது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் கண்டறியப் பட்டது. மேலும், அந்தச் சிலையை ஏலத்தின் மூலம் விற்கும் முயற்சியை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தடுத்து நிறுத்தியது.
சென்னையில் ஒத்திகை
சென்னை: இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் சூழலில், சென்னை எண்ணூர் துறை முகத்திற்கு வருகை தந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
ரூ.1.12 லட்சம் கோடி மகளிருக்கு கடனுதவி
சென்னை: மகளிரின் சமூக பொருளாதார மேம்பாட்டை உள்ளடக்கிய செயல்பாட்டை முதன்மை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட தமிழக அரசின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், கடந்த 4 ஆண்டுகளில் 2.37 கோடி சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.1.12 லட்சம் கோடி கடனுதவி வழங்கி சாதனை படைத்துள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
சென்னை, மே 7- தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-26 ஆம் கல்வியாண்டு சேர்க்கைக்கான இணையதளத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் புதன்கிழமை (மே 7) துவக்கி வைத்தார். மேலும், தமிழகத்தில் உள்ள 55 அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில், 2025-2026- ஆம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு, நேரடி இரண் டாம் ஆண்டு மற்றும் பகுதிநேர பட்டப்படிப்பிற்கு விண்ணப் பிக்கவும், சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யவும் https:// www.tnpoly.in இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள சேவை மையங்கள் (TNEA Facilitation Centre) மூலம் விண்ணப் பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் https://www.tnpoly.in இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. முதலாமாண்டு மற்றும் பகுதி நேர பட்டயப் படிப்புக்கு, இணையதளம் வாயிலாக விண்ணப் பத்தினை மே 7 முதல் 23 வரை விண்ணப்பிக்கலாம். நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்புக்கு இதே தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம்
நடப்பு கல்வி ஆண்டில் 17 புதிய பாடப்பிரிவுகள் துவங்கப் பட்டுள்ளதால், அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரியில், 570 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்படுவார்கள். மாணவர் கள் சேர்க்கை அதிகரிக்கும் வகையில், தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாலிடெக்னிக்குகளில் படிக்கும் மாணவர் களுக்கு தொழிற்சாலையில் பயிற்சி அளிக்கும் வகையில், திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் வகையில் புரிந்து ணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.