மூன்று கைதிகளை விடுவிக்க உள்ளதாக ஹமாஸ் அறிவிப்பு
சனிக்கிழமையன்று மூன்று இஸ்ரேல் கைதி களை விடுவிக்க ஹமாஸ் ஒப்புக் கொண்டுள்ள தாக எகிப்து மற்றும் கத்தார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி யுள்ளது. மேலும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட் டுள்ள விஷயங்களை முறையாக பின்பற்ற வில்லை. இந்நிலையில் பிப் 10 அன்று, ஹமாஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா பிப்-15 சனிக்கிழமையன்று நடத்த இருந்த கைதி கள் பரிமாற்றத்தை தற்காலிகமாக நிறுத்துவ தாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்; மீண்டும் தாக்குதலை துவங் குவோம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும் மிரட்டல் விடுத்து வந்தனர். இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமை ப்புக்கு இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தமா னது 18 வாரங்களுக்கு மூன்று கட்டங்களாக அமலாகியுள்ளது. முதல் கட்ட போர்நிறுத்தத்தின் படி இஸ்ரேல் ராணுவம் எந்த ஒரு தாக்குதலையும் காசாவில் நடத்தக்கூடாது. இஸ்ரேல் சிறையில் அடைத்து வைத்துள்ள 250 ஆயுள் தண்டனை கைதிகள் உட்பட 2000 பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும்.
அதற்கு ஈடாக ஹமாஸ் அமைப்பு 33 இஸ்ரேல் பணயக் கைதி களை விடுதலை செய்ய வேண்டும். மேலும் காசா வில் படுகாயமடைந்துள்ள மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும் பாலஸ்தீனர்கள் 50 பேரை அவர்களுக்கு உதவ குடும்ப உறுப்பினர்களுடன் ஒவ்வொரு நாளும் சிகிச்சைக்கான பயணத்திற்கு அனுமதிக்க வேண்டும். இந்த காலக்கட்டத்தில் 2 லட்சம் டெண்ட்டுகள் மற்றும் 60 ஆயிரம் சிறிய வீடுகளை அனுப்பி வைக்க வேண்டும். இதனு டன் மொத்தம் 12 ஆயிரம் லாரிகளில் நிவாரணப் பொருட்கள் அனுப்பிட அனுமதிக்க வேண்டும்
ஆனால் இஸ்ரேல், போர் நிறுத்தத்தை மீறி தாக்குதலை நடத்தி வருகின்றது. இதுவரை 8,500 லாரிகளில் மட்டுமே நிவாரணப் பொருட்க ளை இஸ்ரேல் காசாவிற்குள் அனுமதித்துள்ளது. அதேபோல கடும் குளிரில் உள்ள பாலஸ்தீனர்க ளுக்கு 20 ஆயிரம் டெண்ட்டுகளை மட்டுமே அனு மதித்துள்ளது. சிகிச்சை தேவைப்படும் பாலஸ்தீ னர்களை சிகிச்சைக்காக பயணம் செய்ய அனு மதிக்கவில்லை. சிறிய தற்காலிக வீடுகளை குறைந்தபட்ச அளவிற்கு கூட இஸ்ரேல் ராணுவம் காசாவிற்குள் அனுப்ப அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.