டேராடூன், செப். 16 - உத்தர்கண்ட் ஆளுநராக இருந்த பேபி ராணி மவுரியா சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைய டுத்து மாநிலத்தின் புதிய ஆளுநராக ஓய்வு பெற்ற துணை தலைமை தளபதி குர்மீத் சிங் நியமிக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் அறிவித்திருந்ததார். இந்நிலையில் உத்தரகண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.சவுகான் பதவிப்பிர மாணம் செய்து வைக்க, முறைப்படி குர்மீத் சிங் ஆளுநராக பொறுப்பேற்றார். குர்மீத் சிங் இந்தியா - சீன எல்லை விவகா ரத்தில் அனுபவம் உடையவர்.