சென்னை, ஜூன் 13- சென்னை கிண்டி கிங் இன்ஸ்டி டியூட் வளாகத்தில் ‘கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை’ கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவ மனையை ஜூன் 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது. இதற்காக அரசின் சார்பில் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வழங்கும் பணி, திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. குடியரசுத் தலைவர் வெளிநாடு பயணத்தால், மருத்துவமனை திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து, மருத்து வமனையை ஜூன் 15 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆனால், குடியரசுத் தலைவர் வராததால், இந்த மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். இது தொடர்பாக மருத்து வம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறுகையில், ``இந்த மருத்துவமனை ரூ.230 கோடியில் கட்டப் பட்டுள்ளது. ரூ.146 கோடி யில் மருத்துவ உபகரணங் கள் வாங்கப்பட்டுள்ளன. மருத்துவமனையைத் திறந்து வைக்க வருமாறு குடியரசுத் தலைவரிடம் நேரம் கேட்கப்பட்டது. அவ ரும் வருவதாகத் தெரிவித் தார். ஆனால், இப்போது எந்த பதிலும் இல்லை” என்றார். தயார் நிலையில் உள்ள மருத்துவமனையை நீண்ட நாட்களாகத் திறக்கா மல் இருப்பது சரியாக இருக்காது. அதனால், வரும் 15 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையைத் திறந்து வைக்கிறார் என்றும் அவர் கூறினார்.