ஆயிரம் ஆண்டு பழமையான விதையில் இருந்து தனித்துவம் மிக்க மரத்திற்கு ஆய்வாளர்கள் புத்துயிர் கொடுத்துள்ளனர். தாவரவியலாளர்கள், வேளாண் நிபுணர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் அடங்கிய குழு இஸ்ரேலின் குகை ஒன்றில் இருந்து இந்த விதையை கண்டுபிடித்தனர். இந்த விதையை வெற்றிகரமாக ஒரு மரமாக வளர்த்துள்ளனர். கதிரியக்க கார்பன் பகுப்பாய்வின் போது இது ஆயிரம் ஆண்டு பழமையான விதை என்று அறியப்பட்டது. தொல்லியல் ஆய்வில் கிடைத்த அற்புத விதை
இப்பகுதியில் இருந்து அழிந்த ஒரு தாவ ரத்தின் எச்சமாக உயிர்த்துடிப்புள்ள ஒரு விதை கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை. 1980களின் கடைசி பகுதியில் சாக்கடலுக்கு அருகில் இருக்கும் ஜூடியன் (Judean) பாலைவனத்தில் ஒரு குகையில் நடந்த தொல்லியல் ஆய்வுகளின்போது ஆய்வாளர்கள் இந்த விதையை கண்டு பிடித்தனர். கி பி 993-1202 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த விதை உரு வாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பரிசோதித்தபோது விதை உயிர்த் துடிப்புடன் இருந்ததால் அது நட்டு வளர்க்கப்பட்டது. ஐந்து வாரங்களுக்கு பிறகு இது முளைக்க ஆரம்பித்தது. ஆறு மாதங்களில் விதை உறை மற்றும் உள்ளு றுப்புகள் உருவாயின. உரிக்கும் நிலை யில் மரத்தின் பட்டை 12 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்தது. கண்டுபிடிக்கப்பட்ட போது இந்த விதை இரண்டு செண்டி மீட்டர்/ ஒரு அங்குலத்திற்கும் சிறிது குறைவான அளவுடன் இருந்தது.
இது பற்றிய ஆய்வுக்கட்டுரை கம்யூனிகேஷன்ஸ் பயாலஜி (Communications Biology) என்ற இதழில் வெளிவந்துள்ளது. இது 2010 இல் நடப்பட்டது. பதினான்கு ஆண்டு பராமரிப்பிற்கு பிறகு இப்போடு இது பசுமையான நுண் உரோமங்கள் உடைய இலைகளுடன் கூடிய பத்தடி உயர மரமாக வளர்ந்துள்ளது. இதன் பட்டை மெலிதான, வெளிறிய பசுமை கலந்த பழுப்பு நிறத்தில் உள்ளது. ஒளிச்சேர்க்கை செய்யக்கூடியது. இதன் இலைகள் உதிரும் தன்மையுடையவை. டிசம்பர் முதல் ஏப்ரல் வரை உள்ள குளிர் காலத்தில் இவை உதிர்கின்றன. அழிந்த இந்த மரத்தின் பிசின் ஷோரி (tsori) என்று பைபிளில் பல முறை குறிப்பி டப்பட்டுள்ளது. புராதன காலத்தில் இது மதிப்புமிக்க ஒன்றாக இருந்தது. ரோம் பேரரசு முழுவதும் இது ஏற்றுமதி செய்யப் பட்டது. நோய் தீர்க்கும், நச்சு முறிவுப் பொரு ளாக இது பயன்பட்டது. இதன் டி என் ஏ ஆய்வுகள் இம்மரம் கமிபோரா இன மரங்களில் தனித்துவம் மிகுந்தது என்று தெரியவந்தது. இவை ஒரு காலத்தில் ஆப்பிரிக்கா, மட காஸ்கர், சௌதி அரேபிய வளைகுடாப் பகு தியில் வளர்ந்தன. இவற்றின் வாசனை மிக்க பிசின் அப்போது புகழ்பெற்றிருந்தது. அறிவியல்பூர்வமாக விவரிக்கப்பட்ட இந்த தாவரத்தின் தெரிந்த 190 இனங்களில் இதுவே ஃப்ராங்க்கின்சென்ஸ் மற்றும் மர் குடும்பத்தில் செழுமையாக பூக்கக்கூடிய இனம். இவை வறட்சியை தாங்கி வளரக்கூடியவை.
மருத்துவ குணங்களுடன் வளரும் மரம்
வரலாற்றுப்பூர்வமாக அதிக நறும ணம் உடைய இந்த இனம் அக்காலத்தில் விலை மதிப்பு மிக்க பிசின்கள், பல வாச னைப்பொருட்களுக்கு அடிப்படையாக இருந்துள்ளது. ஆனால் தெரியாத கூட்டுப்பொருட்களை அறிய நடத்தப்படும் வாயு க்ரோமெட்டோகிராபிமாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி (GCMS) பகுப்பாய்வு களில் இதன் இலைகள், பட்டை, பிசினுக்கு இப்போது மிகக் குறைந்த நறுமணமே இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இனம் முன்பு ஒருகாலத்தில் அழிந்துவிட்டது என்பதை இது உறுதி செய்கிறது. இதன் பட்டை, பிசின், இலை கள் போன்றவற்றை பரிசோதித்தபோது இந்த இனம் இப்போது பூமியில் இருந்து அழிந்துவிட்டது என்று தெரியவந்தது. அரே பியாவில் இருந்து சாலமன் அரசருக்கு பரிசு கொண்டு வந்த ஷெபா ராணியின் நினை வாக இந்த மரத்திற்கு ஷெபா (Sheba) என்று பெயரிடப்பட்டுள்ளது. நோயாளிகளின் நீர் வீக்கத்தை குறைக்க பயன்படும் பெண்ட்டாசைக்ளிக் ட்ரைடெர்பெனாய்டுகள் (pentacyclic triterpenoids) என்னும் கூட்டுப்பொருட் கள், தோல் சிகிச்சையில் பயன்படும் ஆண்டி ஆக்சிடெண்ட் பண்புள்ள ஸ்க்வாலீன் (squalene) என்ற எண்ணெய் உள்ளது ஆய்வுகளின்போது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மருத்துவ குணங்கள் பற்றி தெரி ந்தே அன்று வாழ்ந்த மக்கள் இம்மரத்தை அதிகம் நட்டு வளர்த்தனர் என்று நம்பப்படு கிறது.
இந்த மரம் ப்ராங்க்கின்சென்ஸ் (frankincense) மற்றும் மர் (myrrh) அடங்கிய கமிபோரா (Commiphora) பேரி னத்தை சேர்ந்தது. இந்த இனம் பற்றி இன்னும் அதிகம் அறியப்படவில்லை. மரத்தில் பூக்கள் இன்னும் தோன்றவில்லை என்பதால் இதன் இனப்பெருக்க பண்புகள் பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த மரங்கள் ஏன் அழிந்தன என்பது தெரிய வில்லை. இன அழிவிற்கு முன்பு இன்றைய இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டான் அமைந்துள்ள பகுதியில் இந்த மரம் வளர்ந்திருந்தது. இந்த மரத்தின் இலை களுக்கு வலுவான மருத்துவக் குணங்கள் உண்டு. இதன் இலைகளில் க்ளைக்கோலி பிட் கூட்டுப்பொருட்கள் உள்ளன. பாம் ஆஃப் கிலியாடு (Balm of Gilead) என்ற பிசினை இது உற்பத்தி செய்கிறது. ஆயிரம் ஆண்டு உறங்கிக்கிடந்த ஒர் விதை இன்று அழிந்த ஒரு பேரினத்தை மீண்டும் மனித குலத்திற்கு உயிர்ப்பித்து தந்துள்ளது.