tamilnadu

img

மீனாட்சியம்மன் கோயிலில் கவுன் அணிந்து வந்த சிறுமிக்கு அனுமதி மறுப்பு

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கவுன் அணிந்து வந்த சிறுமிக்கு கோயிலுக்குள் செல்ல காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் உள்ள மீனாட்சியம்மன் உலக பிரசித்தி பெற்றது. இந்நிலையில் கோயிலுக்குள் செல்ல இதுவரை உடைக்கட்டுப்பாடு எதுவும் கிடையாது. இந்நிலையில் இன்று மீனாட்சியம்மன் கோயிலுக்கு கவுன் அணிந்து வந்த சிறுமியை உள்ளே செல்ல காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். பேண்ட் அணிந்து வரவில்லை என்று கூறி காவல்துறையினர் அந்த சிறுமியை கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் காவல்துறை ஆணையரிடம் புகார் தெரிவித்தும் சிறுமி கோயிலுக்குள் அனுமதிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. 

காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றுகோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

;