பொங்கல் பரிசுத்தொகுப்பில் முந்திரியை சேர்க்க வலியுறுத்தல் கடலூர், டிச.27- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு தாரர்களுக்கு வழங்க அரசு உத்தேசித்துள்ள பரிசுத் தொகுப்பில் முந்திரியை சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு முந்திரி பதப்படுத்துபவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து முந்திரி பதப்படுத்தல்-ஏற்றுமதியா ளர்கள் சங்கம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதி யுள்ள கடிதத்தில், “கடலூர் மாவட்டத்தில் முந்திரி பதப் படுத்துதல் பாரம்பரியமாக நடைபெற்றுவருகிறது. சுமார் 3,000 முந்திரி தொழிற்சாலைகள் உள்ளன. இந்தத் தொழிலை நம்பி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும் பங்கள் உள்ளன. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2010-ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் முந்திரி சேர்க்கப்படும் எனத் தெரிவித்தார். அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் முந்திரி வழங்கப்படுகிறது. பணமதிப்பு நீக்கம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) உள்ளிட்ட ஒன்றிய அரசின் கொள்கைகளால் முந்திரி தொழில் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது. முந்தி ரியை பரிசுத் தொகுப்பில் சேர்ப்பதன் மூலம் முந்திரி தொழிலை பாதுகாக்க முடியும். இதன் மூலம் லட்சக் கணக்கான தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு உறுதிசெய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.