சென்னை, ஆக. 19 - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் பயண மாக திங்களன்று (ஆக.19) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். அவரது செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றுள்ளனர்.ஆளுநர் பதவிக்காலம் ஜூலை 31-ஆம் தேதி யுடன் நிறைவடைந்த நிலையில், பதவி நீட்டிப்புக்கான உத்தரவு இதுவரை வர வில்லை. இதனால் தில்லி சென்று குடியர சுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்கும் ஆர்.என். ரவி, பதவி நீட்டிப்பு குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.