சென்னை, டிச. 29 - இந்தியாவில் உள்ள ஆளு நர் பதவிகளை ஒழிக்க வேண்டும் என்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் து.ராஜா வலி யுறுத்தி உள்ளார். அரசியலமைப்பு, மதச்சார் பின்மை, மாநில உரிமை களுக்கு எதிராக செயல்படும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெற வியாழ னன்று (டிச.29) ஆளுநர் மாளி கை முற்றுகை போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி யது. முன்னதாக சைதாப்பேட் டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்தில் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் து.ராஜா பேசிய தாவது: அரசியலமைப்பின் நெறிமுறைகளுக்கு மாறாக, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அடாவடித்தனமாக செயல் படுகிறார். பல மொழிகள்; கலாச்சாரம் என பன்முகத் தன்மை கொண்ட நாடு இந்தியா. கூட்டாட்சி அமைப்பு முறையை கொண்டது. பாஜக ஆட்சி பொறுப்பேற்றது முதலே அரசியல் அமைப்பு சட்டத் தின் மீது தாக்குதலை நடத்த தொடங்கியது. மோடி தலைமை யிலான அரசு, இந்தியாவின் பன்முகத் தன்மை தகர்த்து, ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக மாற்ற துடித்துக் கொண்டிருக்கிறது.
ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும், விடுதலைப் போராட்டத்திற்கும் எந்த தொட ர்பும் இல்லை. விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்த ஆர் எஸ்எஸ் அமைப்பை சார்ந்த ஒருவரை காட்ட முடியுமா? அந்த ஆர்எஸ்எஸ், மதம் சார்ந்த ஆட்சியை நிறுவ ஆளு நர்களை எடுபிடியாக பயன் படுத்துகிறது. தமிழக ஆளு நரை போன்றே கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநில ஆளுநர்களுக்கும் எடுபிடியாக செயல்படுகின்றனர்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு களுக்கு எதிராக உள்ளனர். காசியில் சில தீவிரவாத அமைப்புகள் ஒன்று சேர்ந்து அரசியலமைப்பு சட்டத்தை அகற்றிவிட்டு, மநுஸ்மிருதியை கொண்டு வர தீர்மானம் நிறை வேற்றியுள்ளன. தமிழக ஆளு நர் ஆர்.என். ரவி, தனி நப ராக சனாதனத்தை பற்றி பேசினால் அதனை எப்படி சந்திக்க வேண்டுமோ அதன்படி சந்திப்போம். ஆனால், ஆளு நராக இருந்து கொண்டு சனா தனம் குறித்து பேசுவதால், ஆளுநர் பொறுப்பிலிருந்து அவர் அகற்றப்பட வேண்டும். இந்தியாவில் ஆளுநர் பதவி களை ஒழிக்க வேண்டும். ஆளு நர்க்கு எதிராக மட்டுமல்ல, பாஜக, ஆர்எஸ்எஸ்-க்கு எதிராகவும் இந்த போராட்டத் தை நடத்துகிறோம். சனாதனத்தை ஆதரித்து பேசும் ஆளுநர் அவராகவே பதவியிலிருந்து வெளியேற வேண்டும். இந்தியாவில் மத வாத ஒற்றை ஆட்சி முறையை நிறுவ ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறையை கொண்டு வர முயற்சிக்கின்றனர்.
2024ஆம் ஆண்டு நாடா ளுமன்ற தேர்தலில் பாஜகவை தூக்கியெறிவோம். தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பாஜகவை தூக்கியெறிவோம் என்ற முழக்கம் ஒலிக்க தொ டங்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் புதுவை உட்பட தமிழகத்தில் உள்ள 40 தொகு திகளிலும், பாஜகவையும், அத னோடு சேர்ந்து வரும் கட்சி களையும் வீழ்த்துவோம்.இவ்வாறு அவர் கூறினார். ரம்மி சூதாட்டம் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு போராட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசுகையில், தமிழ் நாட்டில் உள்ள 8 கோடி மக்க ளையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும். மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சொல்வதைதான் ஆளுநர் செய்ய வேண்டும். ஆளுநர் பதவியை வைத்து ஆர்.என்.ரவி சூதாட்டம் நடத்துகிறார். ஒன்றிய அரசு அவரை திரும்ப பெற வேண்டும் என்றார்.
கள்ள உறவு
போராட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், மக்கள் வரிப் பணத்திலிருந்து அனைத்து வசதிகளும் பெற்றுக் கொண்டு மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக் களுக்கு ஒப்புதல் தராமல் ஆளு நர் அடாவடி செய்கிறார். ஆன் லைன் ரம்மியால் 60க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அரசு விளக்கமளித்த பிறகும் ஆளு நர் ஒப்புதல் வழங்க மறுக் கிறார். மறுபுறம், சூதாட்டக் கும்பலை அழைத்து விருந்து கொடுக்கிறார். என்ன விதமான கள்ள உறவு? என்று கேள்வி எழுப்பினார். இந்தியா இந்து நாடு, திருக்குறள் இந்துக்களின் நூல், சனாதனம்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்று ஆளுநர் பிதற்றிக் கொண்டு இருக்கிறார். ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல் படுவதை வேடிக்கை பார்க்க முடி யாது? என்றும் அவர்கூறினார். இதனைத்தொடர்ந்து குயவர்வீதி, ஜோன்ஸ் சாலை வழியாக ஆளுநர் மாளிகை யை முற்றுகையிடச் சென்ற வர்களை ஜீனிஸ் சாலையில் மறித்து காவல்துறையினர் கைது செய்தனர்.