வேலை வாய்ப்புக்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனத்தை தனியாருக்கு விற்க முயல்வதை தடுத்ததால், சிஐடியு மீது கோபமா எனக் கேட்டு சிஐடியு மாவட்டச்செயலாளர் மு.சிவாஜி மேலாண்மை இயக்குநருக்கு திறந்த மடல் எழுதியுள்ளார். அந்த மடலின் விபரம்: கடந்த 4.12.2022 அன்று தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனத்தை ஆய்வு செய்வதாக கூறி, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜ கண்ணப்பன், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம். பி., மாவட்ட ஆட்சித் தலைவர், மேலாண்மை இயக்குநர் மற்றும் உப்பு நிறுவன அதிகாரிகள்,திமுக தலைவர்கள் தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனத்திற்கு வருகை தந்தார்கள்.
இந்த வருகை ஆய்வு என்று கூறப்பட்டாலும் அரசு உப்பு நிறுவனத்தின் சில பகுதிகளை தனியாருக்கு டெண்டர் விடுவதற்காக தான் எனச் செய்திகள் பரவின. அப்படி டெண்டர் அறிவித்து தனியாருக்கு விடப் பட்டால், அங்கு மிகப் பெரிய போராட்டம் நிகழும் என்பதை உணர்ந்து கொண்ட அமைச்சர்கள், அதிகாரி கள் அந்த நிகழ்ச்சி நிரலை கைவிட்டதாகத் தெரிய வருகிறது. ஏனெனில் தொடர்ந்து அரசு உப்பு நிறுவ னத்தை பாதுகாக்க சிஐடியு போராடி வருவதை எல்லோரும் அறிவார்கள். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நாலு கோடி ரூபாய் அளவிற்கு உப்பு சுத்திகரிப்பு நிலையம் உரு வாக்கப்பட்டு, அதை டாட்டா உப்பு நிறுவனத்திற்கு ஒப்படைக்க மேலாண்மை இயக்குநரும் அன்றைய அமைச்சர்களும் முயன்ற போது மக்களை திரட்டி, தொழிலாளர்களை திரட்டி தொடர் போராட்டம், மறியல் உட்பட நடத்தி அதை தடுத்து நிறுத்திய பெருமை சிஐடியுவுக்கு உண்டு. உப்பு நிறுவனத்தில் பணியாற்றக் கூடிய தொழிலா ளர்களின் 95 சதவீதமான தொழிலாளர்கள் சிஐடியு தொழிற்சங்கத்தில் உறுப்பினர்கள். அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். தேர்த லில் ஓட்டு போடுகிற போது அவரவர்கள் சார்ந்த கட்சியை நோக்கி செல்வார்கள்.
ஒற்றுமையாக
அதே நேரத்தில் உப்பு நிறுவனத்தை பாது காப்பது என்று சொன்னால் சிஐடியு தொழிற் சங்கத்தால் தான் முடியும் என்பதை உறுதியாக நம்பக் கூடிய தொழிலாளர்கள் அத்தனை பேரும். தொழிலா ளருடைய அனைத்து பிரச்சனைகளிலும் தலையிட்டு வெற்றி பெறக்கூடிய சங்கமாக சிஐடியு துவக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை திகழ்ந்து வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் சாதிக் கலவரம் நிகழ்ந்த போது உப்பளத் தொழிலாளர்கள் வாழும் கிராமங்களில் மட்டும் எவ்வித பிரச்சனையும் இல்லா மல் அமைதியாக வாழ்ந்த தொழிலாளர்கள் உப்பளத் தொழிலாளிகள் என்பதை மேலாண்மை இயக்குநர் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் அரசியலில் வெவ்வேறு நபர்களாக பிரிந்து நின்றாலும் தொழிற்சங்கம் என்ற முறையில் ஒற்றுமையோடு தொழிலாளர்கள் அனைவரும் சிஐடியு சங்கத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட தொழிற்சங்கத்தை மேலாண்மை இயக்குநர் தவறான முறையில் புரிந்து கொண்டு, முன்னேற்றத்திற்கு சிஐடியு தடையாக இருப்பதாக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மத்தியில் ஒரு பொய்யான தகவலை பரப்பியுள்ளார். மேலாண்மை இயக்குநர் அவர்களே, ஒன்றை புரிந்து கொள்ளுங் கள். சிஐடியு தொழிற்சங்கத்தை பொறுத்தவரை முன்னேற்றத்திற்கு எங்கும் எப்போதும் தடையாக இருந்ததில்லை. முன்னேற்றம் என்பது தனியார் மயம் ஆக்குவது, டெண்டர் விட்டு ஒப்பந்தம் ஏற்படுத்து வது என்று தவறாக நீங்கள் புரிந்து கொண்டால் உங்க ளைத்தான் நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை இந்த நேரத்தில் பணிவோடு சுட்டிக் காட்டு கிறோம்.
கெட்டபெயர் உருவாகும்...
மேலாண்மை இயக்குநரின் இந்த விவாதத்தால் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி அவர்களும் கூட டெண்டர் விடுங்கள், புதிய வேலை வாய்ப்பு உரு வாக்குங்கள் என்று பேசி உள்ளார். அதே நேரத்தில் அமைச்சர்கள் இல்லை இல்லை. அது பொருத்தமாக இருக்காது. அப்படி டெண்டர் விட்டாலோ தனி யாருக்கு கொடுத்தாலோ அரசுக்கு கெட்ட பெயர் உரு வாகும் என்ற முறையில் மறுத்துள்ளதாகத் தெரிய வருகிறது. ஆய்வுக்கு வந்த அமைச்சர்கள் புதிய பகுதியை விஸ்தரித்து, புதிய வேலைவாய்ப்பை உருவாக்க வில்லை என்கிற ஆதங்கம் சிஐடியுவுக்கு இருக்கி றது. மேலும் நிறுவனத்தை வளர்ச்சி அடைய வைக்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்ற தொழிற்சங் கத்தின் கோரிக்கையை ஏற்று நிதி வழங்காதது குறித்தும் சிஐடியுவுக்கு அதிருப்தி உண்டு. ஆனால் மேலாண்மை இயக்குநர் அவர்களே! சிஐடியு குறித்த தங்களது தவறான புரிதலை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கி றோம். தொழிலாளிகள் உரிமையை ஒருபோதும் எவரி டமும், எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாத ஒரு அமைப்பு சிஐடியு வாகும். அதனால் தான் தமிழக உழைப்பாளி மக்கள், ஆளும் கட்சி எதிர்க் கட்சிகளால் கூட எட்ட முடியாத ஒரு பெரும் பலத்தை சிஐடியு சங்கத்திற்கு வழங்கியிருக்கிறார்கள். எனவே தமிழ்நாடு அரசு உப்பு நிறுவன மேலாண் மை இயக்குநர் அவர்களே உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் கருத்தை சிஐடியு நிச்சயம் மாற்றும்.