tamilnadu

அறங்காவலர்கள் நியமனத்துக்கு பின்னரே கோவில் நகைகள் உருக்கப்படும்

சென்னை,அக்.28-  அறங்காவலர்கள் நியமனத்துக்கு பிறகே கோவில் நகைகள் உருக்கப் படும் என்று தமிழ்நாடு அரசு, சென்னை  உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.  தமிழக அரசின் முடிவின்படி 2000 கிலோவுக்கும் மேற்பட்ட நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்யும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதனை எதிர்த்து இண்டிக்ட் கலெக்டிவ் என்ற அமைப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் விசாரணை தலை மை நீதிபதி அமர்வு முன்பு நடை பெற்றது. அப்போது அரசுத்தரப்பு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி,  கோவில் நகைகளை உருக்கவில்லை. காணிக்கையாக வந்த நகைகளை மட்டும் தான் உருக்கப்போகிறோம்.  இந்த காணி க்கையாக வந்த நகைகளை உருக்கும் பணியை மேற்பார்வையிடுவதற்காக  ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரும் உயர்நீதிமன்ற நீதிபதி ஒரு வரும் அடங்கிய குழுவினர் கணக்கெடுக்கும் பணிக்கு நிய மித்திருப்பதாகவும் அவர்கள் கணக் கெடுத்து தருவதாகவும்தெரிவித்தார். மேலும் கடந்த 11 ஆண்டுகளாக நகைகள் கணக்கிடப்படவில்லை. வங்கிகளில் முதலீடு செய்வதன் மூலம் 11 கோடியே 50 லட்சம் ரூபாய்  அளவிற்கு வட்டி வருவாய் கிடைப்ப தற்கு வாய்ப்புள்ளது. அது கோயிலின் செலவுகளுக்கு பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி கள், அறங்காவலர்கள் நியமனங் களை முடிக்கும் வரை தங்க கட்டி களாக உருக்க கூடாது என்று உத்தர விட்டனர். கோவிலுக்கு காணிக்கை யாக வழங்கப்பட்ட நகைகளை கணக்கெடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

;