tamilnadu

ரேசனில் பொருட்கள் இலவசமாக வழங்க வேண்டும் சிபிஎம் வலியுறுத்தல்

மதுரை, ஜூலை 2- மதுரை மாநகராட்சி, திருப்ப ரங்குன்றம், பரவை பேரூராட்சி மேற்கு, கிழக்கு ஒன்றியங்களில் வசிக்கும் மக்களுக்கு ஜூலை மாதத்திற்கான ரேசன் பொருட் களை கடந்த மாதம் போல் இல வசமாக வழங்கவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராம கிருஷ்ணன் வியாழனன்று விடுத் துள்ள அறிக்கை:- கொரோனா ஊரடங்கு ஜூலை 6-ஆம் தேதி வரை மதுரை மாந கர் மற்றும் புறநகரின் சில குறிப்பிட்ட பகுதிகளில் நீட்டிக் கப்பட்டுள்ளது. பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இதனால் கட்டுமான தொழிலாளர்கள், சுமைப்பணி தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கா னோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில் ஜூலை மாதத் திற்கான ஜீனி, பருப்பு, பாமா யில் உள்ளிட்ட பொருட்கள் இல வசமாக வழங்கப்படாது. பணம் கொடுத்துத்தான் வாங்க வேண் டுமென ரேஷன் கடை ஊழியர் கள் கூறுகின்றனர். அரிசி, கோதுமை மட்டும் இலவசமாக வழங்கப்படு மாம். ஊரடங்கால் வாழ்வாரம் இழந்துள்ள ஏழை-எளிய மக்க ளுக்கு ஜூலை மாதத்திற்கான அனைத்துப் பொருட்களையும் ஜூன் மாதம் வழங்கியது போல் இலவசமாக வழங்கவேண்டும். அதேபோல் கொரோன நிவா ரண நிதி அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள பத்து சதவீதம் பேருக்கு இன்னும் வழங்கவில்லை. “ஜூன் 27 ஆம் தேதி முதல் 30- ஆம் தேதி வரை மட்டுமே அரசு வழங்க உத்தரவிட்டுள்ளது. அதற்குப் பின்னர் யாருக்கும் வழங்கவில்லை. அரசே “போதும் நிறுத்திக்கொள்ளுங்கள்” எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. அப்படியென்றால் 20 சதவீத மக்க ளுக்கு நிவாரணம் கிடையாதா? என்ற கேள்வியெழுகிறது. மதுரை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வழங்கியதைப் போல அனைத்து அரிசி அட்டை தாரர்களுக்கும் ரூ.1000 கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.