tamilnadu

img

உணர்ந்திடு உயர்ந்திடு - முனைவர் இரா.செந்தில்குமார்

காலையில் எழுவது நலமாகும் -உன் 
 கட்டுடல் காக்கும் செயலாகும்
கற்றோர் சொல்லை கேட்டிடுவாய்- தினம் 
 கருத்தாய்ப் பழகச் செயல்படுவாய்! 

வாய்மை உனக்கு உயிராகும்- நல் 
 வார்த்தை அன்பைத் தரலாகும்
 வாழ்க்கை என்பது சோலைவனம்-வீணாய் 
 வழுக்கி வீழ்ந்தால் பாலைவனம்!

உழைப்பே உனக்கு உயர்வாகும் - அது
 உயிரை விடவும் மேலாகும்
உன்னுள் இருக்கும் நம்பிக்கை- அதை 
 உணர்வது தானே மனவேட்கை 

முயன்று எழுந்து போரிடுவாய்- பிறர் 
 மூடத் தனத்தை எதிர்த்திடுவாய்!
முறையாய் வாழ்வில் நடந்திடுவாய்- மனம் 
 முற்றிலும் மகிழும் உணர்ந்திடுவாய்! 

மனதை கட்டுப் படுத்திடுவாய்- சிலர் 
 மமதை விரட்டப் புறப்படுவாய்! 
 மனது புண்படப் பேசாதே- தன்
 மானம் கெடும்படி நடவாதே!