tamilnadu

img

ஆளுநரே வெளியேறுக: சிபிஎம் முற்றுகை

சென்னை, ஜன. 20 - தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலகக் கோரி சென்னை கிண்டி யில் உள்ள  ஆளுநர் மாளிகை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளியன்று நடைபெற்ற (ஜன.20) மாபெரும் முற்றுகைப் போராட்டத்தில் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.  சைதாப்பேட்டை சின்னமலை அருகே திரண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயிரக்கணக்கான ஊழி யர்கள் ஆளுநர் மாளிகை நோக்கி  ஊர்வலமாக செல்ல முயன்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தி கைதுசெய்யப்பட்டனர். போராட்டத்திற்கு தலைமையேற்ற கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் பேசுகையில், ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காத ஆர்.என்.ரவி, ஆளுநர்   தானா  அல்லது ஆன்லைன் ரம்மி  நிறுவனங் களின் ஏஜெண்டா என்று வினவினார்.  நாட்டிலேயே  சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த ஒரே ஆளுநர்  ஆர்.என்.ரவிதான். அதேபோன்றே, தமிழகத்திலிருந்தும் வெளியேறுவது தானே நியாயம் என்றும் அவர்கூறினார். “சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 21 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். மசோதாக்களின் மீது  விளக்கம் கோரலாம் அல்லது திருப்பி  அனுப்பலாம். கிடப்பில் போட்டு வைத்திருக்கக் கூடாது. 

தமிழ்நாட்டு மக்களை, சட்ட மன்றத்தை, மசோதாக்களை ஏற்கா விடில் ஆளுநராக நீடிக்க எந்த அருகதை யும், தகுதியும் இல்லை.  மக்களை அவ மதித்துள்ள நிலையில், ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியில் நீடிக்கக்கூடாது” என்றும் அவர் பேசினார். இப்போராட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பி.சம்பத், பெ.சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் ப.செல்வசிங், என்.குண சேகரன், கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர்கள் எல்.சுந்தர்ராஜன் (வட சென்னை), ஆர்.வேல்முருகன் (தென் சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை), எஸ்.கோபால் (திரு வள்ளூர்), சி.சங்கர் (காஞ்சிபுரம்), பாரதி அண்ணா (செங்கல்பட்டு), என்.சுப்பிர மணி (விழுப்புரம்), கோ.மாதவன் (கடலூர்), ஜெய்சங்கர் (கள்ளக்குறிச்சி), எம்.சிவக்குமார் (திருவண்ணாமலை), ஆர்.தயாநிதி (வேலூர்), காசிநாதன் (ராணிப்பேட்டை), மாநிலக்குழு உறுப் பினர்கள் ப.சுந்தரராசன், வே.ராஜ சேகரன், ஆர்.பத்ரி, பி.சுகந்தி, ஏ.ராதிகா,  எம்.சின்னதுரை எம்எல்ஏ, எம்.ராம கிருஷ்ணன், எஸ்.ஜி.ரமேஷ்பாபு, எஸ்.டி. சங்கரி, வீ.மாரியப்பன், இரா.சிந்தன்,  சுதீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.