சென்னை, டிச. 1 - மாநில அரசை சிறு மைப்படுத்த வேண்டும் என்பதற்காக பாஜக தலை வர் தவறான புகாரை கூறுகிறார் என்று மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிரு ஷ்ணன் கருத்து தெரிவித் துள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கை யில், “பிரதமர் மோடி எந்த மாநிலத்திற்கு சென்றாலும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கிறது. செஸ் ஒலிம்பியாட்டிற்காக தமிழகம் வந்தபோது பல அடுக்கு பாதுகாப்பு கொடுக் கப்பட்டிருந்தது. ஆனால் அந்த பாதுகாப்பு ஏற்பாட்டில் குறை இருந்தது என்று சொல்வது சரியானதல்ல. மாநில அரசு மீது ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக பாஜக தலை வர் தவறான புகார் கூறு கிறார்” என்றார். “ஆன்-லைன் சூதாட்டத் தில் ஈடுபட்டு பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதி சந் துரு கொடுத்த அறிக்கை அடிப்படையில், சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை ஆளுநர் 6 மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளார். அவசர சட்டம் காலாவதியாகி மறு படியும் ஆன்-லைன் சூதாட் டம் ஆரம்பித்து உள்ளது. புதுச்சேரியில் ஆன்-லைன் சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுப்போம் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சொல்கிறார். ஆனால், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாவில் கையெ ழுத்திடாமல் வைத்துள்ளார். ஆளுநர் செய்வது சரியான தல்ல. அரசியலமைப்பு சட்டப்படி நியமிக்கப்பட்ட வர் ஆளுநர். அவர், ஒன்றிய அரசின் பிரதிநிதி போல் செயல்படுவது வன்மையாக கண்டிக்கத் தக்கது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் நடைபெறும் தற்கொலை களுக்கு ஆளுநர்தான் பொறுப்பு” என்றும் அவர் கூறினார்.