மதுரை, மே 9- மதுரை தெற்கு வாசல் நகைகடை பஜார் பகுதியில் உள்ள பச்சரிசிக்கார தெரு, மேட்டுக்கம்மாள தெரு ஆகிய பகுதிகளில் வசி க்கும் மேற்கு வங்க நகை தொ ழிலாளர்கள் ஆயிரத்து 250 க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் ஊரடங்கால் மிக வும் சிரமப்பட்டு வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகுதிகுழு தோழர்கள் அத்தொழிலாளர்களை சந்தித்து அரிசி, பரு ப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்க ளை வழங்கினர். பின்னர் அவர்களின் பெயர் பட்டியலை ஆதார் எண்ணுடன் பெற்று மது ரை மாவட்ட ஆட்சியரி டம் அளித்தனர். அவரின்அறிவுறுத்தலின்படி தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் இருந்து இது வரை 580 க்கும் மேற்பட்ட உணவு பொருள்கள் மேற்கு வங்க தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெற்றது. அதனைத் தொடர்ந்து மே 5 ஆம் தேதி 128 நிவாரணப் பொருள்களை மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் வருகை தந்து வழங்கினார் மேலும் 200நபா்களுக்கு இதே தொகுப்புவரும் என்று ஒப்புதல் தெரிவித்து உள்ளார். வாலிபர் சங்க தெற்கு வாசல் பகுதிகுழு தோ ழர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகுதி குழு செயலாளர் யு. எஸ். அபு தாகிர், பகுதிக்குழு உறுப்பி னா் ஏ.அழகேசன் ஆகியோ ருக்கு அத் தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தார்கள்.