tamilnadu

img

நலவாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு கொரோனா நிவாரணம் ரூ.1000

மதுரை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை நிவாரணமாக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட உள்ளது.

மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நலவாரியத்தில் பதிவுசெய்து நடப்பில் உள்ள கட்டுமானத் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் தங்களது பெயர், தகப்பனார் அல்லது கணவர் பெயர், பதிவுஎண், அலைபேசிஎண்,  உறுப்பினரின் வங்கிக் கணக்குப் புத்தகத்தில் சேமிப்புக் கணக்குஎண், வங்கிக் கிளை விபரம் உள்ள பக்கநகல் ஆகிய விபரங்களை claimcons@gmail.com என்றமின்னஞ்சலுக்கோஅல்லது மதுரை தொழிலாளர் உதவிஆணையர் (சபாதி) அலைபேசிஎண். 9566281422க்கு வாட்ஸ்அப் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். இந்தத் தகவலை மதுரைமாவட்டஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
 

;