சென்னை, அக்.28- தமிழகத்தில் முதல் முறையாக நவம்பர் 1 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநகர சபைக் கூட்டம் நடைபெறுகி றது. தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப் புகளில் மேயர் அல்லது தலைவர், நிலைக்குழு தலைவர், மண்டலத் தலை வர் உள்ளிட்ட பதவி கள் உள்ளன. இந்நிலை யில் நகர்ப்புற உள் ளாட்சி அமைப்புகளில் வார்டு குழு மற்றும் ஏரியா சபை அமைப்பதற்கான விதிகளை கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு வெளியிட்டது. இதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஒவ்வொரு வார்டுக் கும் வார்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் 5 லட்சம் வரை மக்களின் தொகை உள்ள வார்டுகளில் 4 முதல் 5 ஏரியா சபைகளும், 5 முதல் 10 லட்சம் வரை உள்ள மக்கள் தொகை உள்ள வார்டுகளில் 6 முதல் 9 ஏரியா சபைகளும், 10 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை உள்ள வார்டுக ளில் 10 ஏரியா சபைகளும், நகராட்சிகளில் ஒரு வார்டில் 4 சபைகளும், பேரூராட்சி யில் ஒரு வார்டில் 3 சபைக ளும் அமைக்கப்பட்டன. இந்நிலையில், பல்லா வரம் அருகே பம்மல் 6-வது வார்டில் நவம்பர் 1 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநகர சபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்கிறார்.