tamilnadu

பிரதமர் நிவாரண நிதிக்கு ரயில்வே தொழிலாளர்கள் ரூ. 95 லட்சம்

மதுரை, மே 9- இந்தியாவில் கொரோனா பேரழிவிலிருந்து பொது மக்களை காக்க பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  இந்த நிதிக்கு       அனைத்து ரயில்வே ஊழியர்களும் அதிகாரிகளும் தங்களுடைய ஒரு நாள் சம்பளத்தை  நன்கொடையாக வழங்கி வருகிறார்கள். 500க்கு மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் தங்களுடைய ஐந்து நாள் சம்பளத்தை இந்த நிதிக்கு வழங்கியிருக்கிறார்கள்.      இதுவரை மதுரை கோட்ட ரயில்வே ஊழியர்கள் சார்பாக ரூபாய் 95 லட்சம் பிரதமர் நிவாரண நிதிக்கு  வழங்கப்பட்டுள்ளது. இதில் முத்தாய்ப்பாக  பயணிகள் ரயில் ஓட்டுனர் ஜேம்ஸ் செல்வராஜ்  தனது மாத வருமானத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார். அவரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர்.லெனின் உட்பட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பாராட்டினர்.