tamilnadu

img

பிப்.23-24 பொதுவேலைநிறுத்தம்: மீன்பிடித் தொழிற்சங்கம் பங்கேற்கிறது

சென்னை, ஜன. 9 - ஒன்றிய அரசின் தொழிலாளர், மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து பிப். 23,24 அன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் மீனவர்கள், மீன் தொழிலாளர் ்களும் கலந்து கொள்கின்றனர். தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பின் (சிஐடியு) மாநில குழு கூட்டம் ஜன.7 அன்று சென்னையில் நடைபெற்றது.   கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. செயல் தலைவர் எம். கருணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் சிஐடியு மாநில துணை பொது செயலாளர் வி.குமார், பொதுச் செயலாளர் எஸ். அந்தோணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், ஒன்றிய பாஜக அரசிட மிருந்து நாட்டை பாதுகாப்போம்; மக்களை பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு பிப். 23, 24 தேதிகளில் அனைத்து தொழிற்சங் ்கங்கள் சார்பில் தேசிய அளவில்வேலை நிறுத்தம்நடைபெறுகிறது.இதில் தேசிய மீன்வள கொள்ளை 2021 வரைவு மசோதாவை கைவிட கோரி மீனவர்களும், மீன் தொழிலாளர்களும் கலந்து கொள்கின்றனர். இந்த வேலை நிறுத்தத்தை விளக்கி மீனவர் அமைப்பு களை ஒருங்கிணைந்து மாநிலம் முழுவ தும் பிரச்சாரம் நடைபெறும். வேலை நிறுத்தத்தில் பங்கு பெறுவதை தெரிவித்து பிப்.4 அன்று ஆட்சியரிடம் மனு அளிக்கப் ்படும். முறைசாரா தொழிலாளர் நலவாரியத்தை போன்று மீனவர் வாரியத்திலும் ஓய்கூதியம் வழங்க வேண்டும்.

மீனவர் நலவாரியத்தை தனி அலுவலர், ஊழியர்கள், தனி அலுவ லகம் அமைத்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பிப்.20-27 தேதி வரை ஒரு வார கால கையெழுத்து இயக்கம் நடைபெறும். இந்த மனுவை முதலமைச் ்சரை சந்தித்து வழங்கப்படும். மீன்பிடி படகுகளை குறிப்பிட்ட நாளில் புதுப்பிக்கவில்லை என்றால்மானிய மண்ணெண்ணெய், டீசல் ரத்து செய்யப் ்படும் என்று மீன்வளத்துறையின் உத்தரவை திரும்ப பெற வேண்டும், ஏற்கெனவே இருந்தது போல் 3 ஆண்டுகளுக்கு ஒரு  முறை புதுப்பித்தல் நடத்த உத்தரவிட வேண்டும். மீன்பிடி படகுகளின் உரிமம் பெற பழைய கட்டணத்தையே வசூலிக்க வேண் ்டும். கன்னியாகுமரி மாவட்டத்தை போன்று தமிழகம் முழுவதும் ஆட்சியர் தலைமை யில் மாதந்தோறும் குறைதீர்ப்பு கூட்டம் நடத்த வேண்டும். கடற்கரை மற்றும் உள்நாட்டுப் மீனவர் பகுதிகளில் தேவையான மீனவர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கவும், மீன்பிடித் தொழிலாளர்கள் அலைச்சல் இன்றி மானிய மண்ணெண்ணெய், டீசல், பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.