நாகர்கோவில் ஜன. 21 மீனவர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் நலவாரியம் மற்றும் இதர பிரச்சனைக ளைமுன்வைத்து தமிழ்நாடு முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லும் பொருட்டு கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணன் கோவில் பகுதியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக முடங்கி இருக்கும் மீனவர் நல வாரியத்தை உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியங்கள் செயல்படுவது போல் செயல்படுத்த கோரி மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் கையெழுத்துக்களை பெற்று முதலமைச்சரிடம் வழங்க தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) சார்பில் இந்த கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. இந்நிகழ்விற்கு கன்னியாகுமரி மீன் பிடி தொழிற்சங்க கிளை தலைவர் எஸ். வில்சன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினரும் முன்னாள் எம். எல். ஏ யுமான லீமா றோஸ் கையெழுத்து இயக்கத்தினை துவங்கி வைத்தார். மீன் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் எஸ். அந்தோணி, சங்கத்தின் மாவட்ட செயலாளர் சகாய பாபு, தமிழ்நாடு சிறு பான்மையினர் மக்கள் நல குழுவின் மாநில பொருளாளர் எம். ஏ. உசேன், ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ. மீனாட்சி சுந்தரம், ஓய்வு பெற்ற மின் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரான்ஸில், ஓய்வு பெற்ற ஒன்றிய அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜநாயகம், மோட்டார் ஓட்டுநர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர், சிபிஎம் நகர செயலாளர் கே. மோகன், மற்றும் சங்க உறுப்பினர்கள் ஜேசுராஜன், மீனா, செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.