tamilnadu

img

சமூகநீதிக்கான கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு!

புதுதில்லி, ஏப். 3 - சமூக நீதிக்கான போராட்டத்தையும், சமூக நீதி இயக்கத்துக்கான தேசியக் கூட்டுத் திட்டத்தையும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக, தமிழ்நாடு அரசு ஒருங்கிணைத்த “சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு” (ஏப். 3) நடைபெற்றது. தில்லி ‘இந்தியா கேட்’ அருகில் திங்களன்று மாலை 4.30 முதல் 7 மணிவரை நடைபெற்ற இந்த மாநாட்டில், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், 24 அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் நேரிலும், காணொலி வாயிலாகவும் பங்கேற்றனர். மாநாட்டிற்குத் தலைமை வகித்து, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்  சென்னையில் இருந்து காணொலி வாயிலாக உரையாற்றினார். சமூக  நீதிக்கான அகில இந்தியக் கூட்டமைப் பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அமைப்பாளரும், ஓய்வுபெற்ற நீதிபதியு மான வி. ஈஸ்வரய்யா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளரும், எம்.பி.யுமான பி.வில்சன் முதன்மை உரையாற்றினார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த்  சோரன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலாளர் து. ராஜா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப்  பிரதேச மாநில எதிர்கட்சித் தலைவரு மான அகிலேஷ், ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான பரூக்அப்துல்லா, திரி ணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங் களவை குழுத் தலைவர் டெரிக் ஓ பிரைன், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-வும், மகாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வருமான சஜன் சந்திரகாந்த் புஜ் பால், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், ராஷ்ட்ரிய ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் குமார் ஜா, இந்தி யன் யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான இ.டி. முக மது பஷீர், பாரத் ராஷ்டிர சமிதி கட்சி யின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டாக்டர் கே. கேசவ ராவ், ராஷ்ட்ரிய சமாஜ்  பக்சா தேசியத் தலைவரும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சருமான மகா தேவ் ஜன்கர், அசாமைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் நபா குமார் சாரானியா,  ஹரியானா லோக் தந்திர சுரக் ஷா கட்சி யைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ராஜ்குமார் சயினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மூத்த பத்திரிகையாளர் திலிப் மண்டல், பிஏஎம்சிஇஎப் தேசிய தலை வர் வாமன் மேஷ்ராம், பிஏஜிஏஏஎம் தேசிய அழைப்பாளர் பி.என்.வாங்,  இந்திய மக்கள் கட்சியின் முன்னாள் தலைவர் பி.டி. போர்கார், சம்விதான் பச்சாவோ சங்கர்ஷ் சமிதி அழைப்பாளர் அனில் ஜெயிந்த், தில்லி பல்கலை.பேரா சிரியர்கள் லஷ்மண் யாதவ், சுராஜ் மண்டல், ரத்தன் லால், மத்தியப் பிரதேச பிச்சுடா வர்க் சம்யுக்த் சங்கர்ஷ் மோர்ச்சா முதன்மை ஒருங்கிணைப்பாளர் பகதூர் சிங்லோடி ஆகியோர் அறிமுக உரை யாற்றினர். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி., மனிதநேய மக்கள்கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ, கொம தேக பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் எம்எல்ஏ, தவாக தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். சமாஜிக் சேட்னா அறக்கட்டளை நிறுவனரும், அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான வீரேந்திர சிங் யாதவ் நன்றி கூறினார்.