tamilnadu

img

பட்டாசு ஆலை விபத்து - 5 பேர் பலி

மதுரை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை உசிலம்பட்டி  அருகே அழகு சிறை கிராமத்தில் பட்டாசு ஆலை வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சிலர் காயம் அடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.