tamilnadu

img

‘காலா பாணி’ நாவலைப் படமாக்கினால் உலக அளவில் பேசப்படும்: சமுத்திரகனி

சென்னை,ஜன.16- 46-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் 2022 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரும் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரியுமான டாக்டர் மு.ராஜேந்திரனுக்கு பாராட்டு நிகழ்வு அகநி அரங்கில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி முன்னாள் ஆணையர் எஸ்.என்.பிரேமா, கட்டிடக் கலைத் துறை பேராசிரியர் மணி மேகலை, பேராசிரியர் போஸ், டாக்டர் ரமேஷ்,  எழுத்தாளர் அ.வெண் ணிலா, திரைப்பட வசன கர்த்தா அஜயன்பாலா  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் சிறப்பு விருந்தி னராகப் பங்கேற்ற திரைப்பட இயக்குநரும், திரைக்கலை ஞருமான சமுத்திரகனி பேசும்போது, “சாகித்ய அகாதமி விருது ஒரு தகுதியான நாவ லுக்குத்தான் வழங்கப்பட்டி ருக்கிறது. நம் தமிழ்நாட்டில் நடைபெற்ற விடுதலை போராட்ட வரலாற்றை அறிந்துகொள்ள விரும்பும்  அனைவரும் இந்த நாவலைப் படிக்க வேண்டும். ‘காலா பாணி’ நாவலைப் படமாக்கினால் உலக அளவில் அவதார் படத்தைவிட சிறப்பாகப் பேசப்படும் படமாக அமை யும். இதனைப் படமாக்கும் முயற்சியில் நான் ஆர்வமாக உள்ளேன். சிறந்த திரைக் கலைஞர்களைக் கொண்டு  இந்நாவலைப் பட மாக்குவேன்” என்றார்.இந்நிகழ்வில் கவிஞர் மு.முருகேஷ் வரவேற்றார். நூலாசிரியர் மு.ராஜேந்தி ரன் ஏற்புரையாற்றினார்.