புதுச்சேரி, ஜன. 7- புதுச்சேரி அரசின் மின்துறை தனியார்மயத்தை எதிர்கட்சிகள் ஒன்றி ணைந்து முறியடிக்க வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் அறை கூவல் விடுத்தார். புதுச்சேரி அரசின் மின்துறை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிராக காம்ரேட் டாக்கீஸ் குழுவினர் தயாரித்த டவுன் டூ டார்க் (வெளிச் சத்தில் இருந்து இருளுக்கு) என்ற ஆவணப்படம் வெளியீட்டு விழா புதுச்சேரியில் வெள்ளியன்று (ஜன. 6) நடைபெற்றது. மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு நிர்வாகியும், சிஐடியு புதுச்சேரி செயலாளருமான ஜி.சீனு வாசன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் ஆவணப் படத்தை வெளியிட காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். பின்னர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், புதுச்சேரி மாநில என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு மின்துறையை தனி யாருக்கு விற்பதற்கு கடந்த ஆண்டு முடிவெடுத்த போது பொறியாளர்கள், ஊழியர்கள் இணைந்து மகத்தான போராட்டத்தை நடத்தினர். பின்னர் அரசின் உத்தரவாதத்தை தொடர்ந்து அந்த போராட்டம் தள்ளி வைக்கப் பட்டது. இதன் பின்னரும் கூட வரும் 9ஆம் தேதி மீண்டும் மின்துறையை தனியாரிடம் வழங்கும் நடவடிக்கை களை என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசு எடுத்து வருகிறது. புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கப்பட்டால், புதுச்சேரி பிரதேசத்தின் தொழில் வளர்ச்சி பாதிப் பதோடு, ஏழை எளிய மக்களின் மின் கட்டணம், மின் இணைப்பு பெறுவதில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.
மக்கள் தொகை அதிகமுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்தாண்டு மின்துறையை தனி யாருக்கு விற்பது என்று முடிவெடுத்து அரசு அறிவித்த நிலையில், பொறி யாளர்கள், ஊழியர்கள் ஒன்றுபட்டு போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கு முன்பு முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிபணிந்து மன்னிப்பு கேட்டு, மின்துறை தனியார் மயமாக்கும் அறிவிப்பை திரும்பப் பெற்றார். சண்டி கரிலும் மின்துறை தனியார் மயம் அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு பாஜக ஆட்சி நடத்தும் மகாராஷ்டிராவில் மின்துறை தனியார் மயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 86 ஆயிரம் பொறி யாளர்கள், தொழிலாளர்கள் ஒன்று பட்டு போராட்டம் நடத்தினர். அதன் பிறகு மகாராஷ்டிரா அரசு மண்டி யிட்டு அந்த அறிவிப்பை திரும்ப பெற்றது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் மின்துறையை தனியார் மயமாக மாற்றியே தீருவோம் என்று முடிவெடுத்திருப்பது, ஒட்டுமொத்த புதுச்சேரி மக்களை வஞ்சிப்பதாகும். மின்துறை தனியார் மயமாக்குவோம் என்று அரசின் முடிவை எதிர்த்து மக்களிடம் கொண்டு செல்லவே இந்த ஆவணப்படத்தை வெளியிடு கிறோம். புதுச்சேரி மாநிலத்தை பாஜக பரிசோதனைக் கூடமாக பயன்படுத்து கிறது.
போம், தனியாருக்கு அனுமதிக்க மாட்டோம் என எதிர்கட்சிகள் இணைந்து, ஒட்டுமொத்த மக்களை யும் திரட்டி மகத்தான போராட் டத்தை நடத்தி என்.ஆர்.காங்கிரஸ் பாஜகவின் இந்த முயற்சியை முறி யடிக்க வேண்டும் என்று ஜி.ராம கிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சிவா
பின்னர் ஆவணப்படம் குறித்து எதிர்கட்சி தலைவரும் திமுக மாநில அமைப்பாளருமான ஆர்.சிவா பேசுகையில், இந்த ஆவணப்படத்தை நமது கட்செவிமூலமாக (வாட்ஸ்அப்) பகிர்ந்தாலே புதுச்சேரியில் மிகபெரிய எழுச்சி ஏற்படுத்த முடியும். மாநில மக்களின் சொத்தான மின்துறையின் சொத்துக்களை தனியாருக்கு தாரைவார்க்க நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றார். ஆ.மு.சலிம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ஆ.மு.சலீம் பேசுகையில், இது வெறும் மின்துறை தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல, மாநில மக்களின் உரிமைக்கான போராட்டம். ஒன்றிய அரசின் கொள்கை முடிவு என்று கூறும் துணைநிலை ஆளுநர், யாருடைய சொத்தை தனியாருக்கு கொடுப்பது. புதுச்சேரியில் நாம் பெற்ற விடுதலையை பாதுகாக்க வேண்டும் என்றால் மின்துறை தனியார் மயத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார்.
தேவ.பொழிலன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் பேசுகையில், மக்களுக்கு எதிரான மின்துறை தனியார்மய நடவடிக்கைகளை எதிர்த்து நகர்புறம், கிராமப்புறம், விவசாயி, தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரையும் திரட்டி போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.
ஜி.ராமசாமி
மின்துறை தனியார்மய போராட்ட எதிர்ப்புக்குழுவின் ஆலோசகர் ஜி.ராமசாமி பேசுகையில், மின்துறை தனியார் மயமாக்கப்பட்ட மாநிலங்க ளில் மின் விநியோகம் முறையாக வழங்கப்படவில்லை என்பதுதான் வரலாறு. மின் துறை தனியார்மயமா னால் மின் கட்டணம் கடுமையாக உயரும். எனவேதான் சேவைத் துறை பட்டியலில் உள்ள மின்சாரத்தை தனியாருக்கு கொடுத்தால் இருளை நோக்கி செல்லக்கூடிய அபாயம் உள்ளது என்று எச்சரிக்கிறோம் என்று கூறினார். இந்த கூட்டத்தில் அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ராதா கிருஷ்ணன் உட்பட பலர் பேசினர். காமாட்சி ராமன் தலைமையிலான ஆவணப்பட குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.