திருமங்கலம், மே 10- கொரோனா பரவலில் மதுரை மாவட்டததில் 112 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பெங்களூ ரிலிருந்து திருநெல்வேலி செல்லும் இரண்டு இளை ஞர்கள் எப்படியோ மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்ப லூர் சுங்கச்சாவடியை அடைந்துள்ளனர். சுங்கச்சாவடி அருகில் திருமங்கலம் பகுதி சமூக ஆர்வலர் வில்லியம் எபிநேசர் என்பவர் நின்று கொண்டிருந்திருக்கிறார். அவ ரிடம் சென்ற இந்த இரண்டு இளைஞர்கள் தங்களது நிலையை எடுத்துக் கூறி திருநெல்வேலி செல்ல உதவு மாறு கேட்டுள்ளனர். அவரோ முறையாக அங்கிருந்த காவலர் ரிஷிகேசன் என்பவரிடம் அழைத்துச் சென்று நிலைமையை விளக்கியுள்ளார்.
ரிஷிகேசன் இது குறித்து திருமங்கலம் காவல்துறைக்கு தகவல் தெரி விக்காமல் அந்த வழியே சென்ற லாரியில் இருவரையும் ஏற்றி திருநெல்வேலிக்கு அனுப்பியுள்ளார். நிகழ்விட சம்பவங்களை வீடியோவாக பதிவு செய்த வில்லியம் எபிநேசர் அதை வாட்ஸ்-அப்பில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த திருமங்கலம் நகராட்சி அதிகாரிகள் இரு இளைஞர்களையும் எங்களிடம் ஏன் ஒப்படைக்க வில்லை என காவல்துறையினரிடம் கேள்விகேட்டுள்ள னர். இரண்டு நாட்களாகியும் முறையாக பதில் கிடைக் காததால் அவர்கள் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு பிரச்சனையை கொண்டு சென்றுள்ளனர். சம்பந்தப்பட்ட திருமங்கலம் காவலர் ரிஷிகேசன், காவல்துறை சார்பு ஆய்வாளர் பாலமுருகன், ஆய்வா ளர் பரமேஸ்வரி ஆகியோர் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்த வில்லியம் எபிநேசர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வில்லியம் எபிநேசரின் வாட்ஸ்-ஆப் பதிவைப் பார்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருமங்கலம் தாலுகாக் குழு உறுப்பினர் ஜெயபால், கருத்துச்சுதந்திரம் என்ற அடிப்படையில் அவர் ஒரு பதிவையிட்டுள்ளார். இந்த நிலையில் திருமங்கலம் காவல்துறை சார்பு ஆய்வாளர் பாலமுருகன், ஜெயபாலை காவல்நிலை யத்திற்கு வரவழைத்து அவரது செல்போனைப் பறித்துக் கொண்டு வாக்குவாதம் செய்துள்ளார். இருவருக்கும் நடந்த விவாதம் காவல்நிலைய வீடியோவில் முழுமை யாகப் பதிவாகியுள்ளது. காலை 10.30 மணிக்கு காவல்நிலையம் சென்ற ஜெயபாலை சட்டத்திற்குப் புறம்பாக காவல்நிலையத்தில் வைத்திருந்து இரவு எட்டு மணிக்கு மேல் விசாரிக்கமாலேயே வழக்குப்பதிவு செய்து சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர். ஆனால் ஜெயபாலின் செல்போனை வாங்கி கொண்ட ஆய்வா ளர் பரமேஸ்வரி, திரும்ப வழங்கவில்லை.
காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் பேசியபிறகு 4 நாட்கள் கழித்து பின் செல்போனை வழங்கியுள்ளார். இந்நிலையில் வாட்ஸ்-அப்பில் கருத்து பதிவிட்டதற்காக ஜெயபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் லாரியில் சென்ற இளைஞர்கள் திருநெல்வேலி சென்றார்களளா? அவர்கள் தங்களை கொரேனா சோதனைக்குட்படுத்திக் கொண்டார்களா? என்பது தெரியவில்லை. உண்மையிலேயே காவல் துறை கண்டுபிடிக்க வேண்டியது அந்த இரு இளை ஞர்களைத் தான். மாறாக ஒரு கட்சித் தலைவரை சட்டத்திற்குப் புறம்பாக காவல்நிலையத்தில் வைத்தி ருப்பதும், எஸ்.பி.யின் பெயரால் மிரட்டுவதும் வழக்குப் போடுமல்ல. கொரோனா பரவலால் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கோ, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கோ தகவல் தெரி விக்காமல் மறைத்தற்காக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது சார்பு ஆய்வாளர், ஆய்வாளர் ஆகியோர் மிதுதான். திருநெல்வேலி இளைஞர்களை கண்டறிந்து மக்களைப் பாதுகாக்க வேண்டியது மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறையின் பொறுப்பு.