tamilnadu

img

கரும்பு விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில் , ஜன. 21- தஞ்சை மாவட்டம் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு 53 நாட்க ளாக தொடர்ந்து காத்திருப்பு போராட்  டம் நடத்தி வரும் கரும்பு விவசாயி களின் கோரிக்கைகளை பேசி முடிக்க அரசை வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் நாகர் கோவில் பார்வதிபுரத்தில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு போராடி வரும் கரும்பு விவ சாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி சனியன்று நாகர்கோவில் பார்வதி புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சாமி.நட ராஜன் கோரிக்கை விளக்கவுரை யாற்றினார். மாவட்ட செயலாளர் ஆர். ரவி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் என். முருகேசன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.  சாமி.நடராஜன் கூறுகையில் தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி மற்றும் கடலூர் மாவட்டம் சித்தூரில்  திருஆரூரான் சர்க்கரை ஆலைகள் உள்ளன. கடந்த 2019 ஆம்  ஆண்டு முதல், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை யை வழங்காமல் ஆலைகள் மூடப்  பட்டுள்ளன. இதில் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு சுமார் ரூ.112 கோடி வழங்காமலும்,

மேலும், சுமார் 6 ஆயிரம் விவசாயி கள் பெயரில் மோசடியாக, ரூ.200 கோடியை 12 வங்கியிலிருந்து கட னாகப் பெற்றுள்ளார்கள். அவர்கள், விவசாயிகளை கடனாளியாக மாற்றியுள்ளனர். இந்நிலையில், நிலுவைத் தொகையை வழங்காமலும், விவ சாயிகள் பெயரில் மோசடியாக வங்கி யில் வாங்கிய கடனையும் ஆலை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாமல், அந்நிறுவனம், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திற்கு சென்று, 2 சர்க்கரை ஆலைகளையும் பொது ஏலத்தில் விட்டனர். இதில், திரு மண்டங்குடி சர்க்கரை ஆலையை கால்ஸ் என்ற புதிய நிர்வாகம் ஏலத்தில் எடுத்துள்ளது. புதிய நிர்வா கம், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை மற்றும்  விவசாயிகள் பெயரில் பெற்ற கடனை குறித்து முடிவெடுக்காமல் இந்த ஆலையை திறக்க முயற்சித்தனர். இதற்கு எதிராக ஆலை முன்பு கடந்த  53 நாட்களாக தொடர்ந்து காத்தி ருப்பு போராட்டம் நடத்தி வருகின்ற னர் விவசாயிகள். இது குறித்து தமிழக முதல்வரி டம் முறையிட்டும் பிரச்சனை தீர வில்லை. எனவே, விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அவர்களது கோரிக் கையை நிறைவேற்ற வலியுறுத்தி யும், இவர்களை கண்டுகொள்ளாத தமிழக அரசைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  இந்த ஆலையைக் கூட்டுறவுத் துறை மூலம் தமிழக அரசு கையகப்படுத்த  வேண்டும் என்றும் அந்த ஆலை யின் விவசாயிகளின் பிரச்சனை களை உடனே அரசு தீர்க்க வேண்டும் என்றும்  வலியுறுத்தினார்.