tamilnadu

img

வெண்மணி தியாகிகள் சுடர் பயணம் துவங்கியது

நாகப்பட்டினம், டிச.6- அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய மாநாடு திருச்சூரில் நடைபெறுவதையொட்டி தியாகத்தின் வீர வரலாற்று பூமியான வெண்மணி நினைவிடத்திலிருந்து சுடர் பயணம் செவ்வாயன்று புறப் பட்டது. கீழ வெண்மணி தியாகிகள் நினை விடத்தில் நடைபெற்ற துவக்க நிகழ்  வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம், அகில இந்திய இணைச் செயலாளர்  விஜூ கிருஷ்ணன், மாநில பொதுச்செய லாளர் சாமி.நடராசன், அகில இந்திய துணைத் தலைவர் எஸ்.கே.பிரீஜா, சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.மாரி முத்து, கீழ்வேளூர்  சட்டமன்ற உறுப்பி னர் வி.பி.நாகைமாலி, மாநில  துணைத்தலைவர் வி.சுப்பிரமணி யன், நாகை மாவட்டச் செயலாளர் கோவை.சுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளர் எஸ்.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் துவக்கத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முது பெரும் தலைவருமான  101 வயது கடந்த தோழர் என்.சங்கரய்யா காணொ லிக் காட்சி மூலம் தனது வெண்கல குரலால்  சுடர் பயண நிகழ்வை துவக்கி வைத்தார்.  அரங்கம் சிலிர்க்க அந்நிகழ்வு அமைந்தது.