கோடியேரி பாலகிருஷ்ணன் நகர்/திருச்சூர், டிச.17- நமது நாட்டில் உள்ள ரயில்வேயில் உட்பட லட்சக்கணக்கான காலியிடங்களை நிரப்ப ஒன்றிய அரசு முன்வரவில்லை. பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டு களுக்காக பலிகொடுக்கும் கொள்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் புதிய தலைமுறையின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப் பட்டுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கவலை தெரிவித்தார். அகில இந்திய விவசாயிகள் சங்க அகில இந்திய மாநாட்டின் ஒரு பகுதியாக திருச்சூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் மேலும் பேசியதாவது: இன்று நாடு எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு அடிப்படையாக 30 ஆண்டுகளுக்கு முன்பு ஏற் படுத்திய காட் ஒப்பந்தம் உள்ளது. ஒன்றிய அரசு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தும்போது மாநில அரசுகளிடம் கலந்தாலோசிக்க வேண்டும். அத்தகைய ஒப்பந்தங்கள் பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகளை பாதிப்புக்குள்ளாக்கும். எனவே, அந்த ஒப்பந்தங்கள் குறித்து கருத்து கூற மாநிலங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். நாடாளுமன்றம் உள்ளது. அங்கு இதுகுறித்து விவாதிக்கப்பட வேண்டும். ஆனால் அமைச்சர வைக்கு கூட தெரிவிக்காமல் காட் ஒப்பந்தம் இருட்ட டிப்பு செய்யப்பட்டது.
பின்னர் ஆசியான் ஒப்பந்தம் அதே வழி முறையில் மேற்கொள்ளப்பட்டது. விவசா யத்தை கடுமையாக பாதிக்கும் இந்த ஒப்பந்தத்தை முதலாவது ஐமுகூ அரசு மேற்கொண்டது. ஆனா லும், அன்று வலுவாக இருந்த இடதுசாரிகளின் எதிர்ப்பால் அந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த முடிய வில்லை. பின்னர் இரண்டாவது ஐமுகூ அரசு வேகமாக அந்த ஒப்பந்தத்தை அமல்படுத்தியது. இது நாட்டில் உள்ள விவசாயிகளை கடுமை யான பாதிப்புக்கு உள்ளாக்கியது. அதிமான விவ சாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. அதையொட்டி விவசாயிகள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.
படிப்பினை பெறாத பாஜக அரசு
இந்த நிலையில்தான் விவசாயத்தை முழுமை யாக சீரழிக்கும் சட்டத் திருத்தங்களை நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நிறைவேற்றி யது. அதை துவக்கம் முதலே இடதுசாரிகளும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் போன்ற விவசா யிகள் அமைப்புகளும் கடுமையாக எதிர்த்தன. நமது நாடு சந்தித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டத்தை இந்த பின்னணியில் பார்க்க வேண்டும். நாங்கள் எங்களது வழியிலேயே செல் வோம் எங்களை தடுக்க யாரும் இல்லை என்று பாஜக மக்கள் விரோத கொள்கைகளை ஒன்றன் பின் ஒன்றாக அமல்படுத்தி வந்தது. ஆனால் மக்கள் சக்திக்கு மேலானது எதுவும் இல்லை என்பதை நமது விவசாயிகளின் போராட்டம் தெளிவு படுத்தியது. அப்போராட்டத்தில் விவசாயிகள் பெரும் சிரமங்களை சந்தித்தனர். ஆனாலும், இறுதியாக தலைகுனிய வேண்டிய நிலைக்கு பிரதமரும் பாஜகவும் உள்ளாக்கப்பட்டதை நாம் காண நேர்ந்தது. இதிலிருந்து ஏதேனும் படிப்பினை பெற்றார்களா என்றால், இல்லை என்பதையே தற்போதும் அவர்கள் தொடரும் மக்கள் விரோத நடவடிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. விவசாயத் துறைக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுவந்த தொகையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன் பாதிப்புகளை நாடு முழுவதும் விவசாயிகள் சந்தித்து வருகிறார்கள். ஆதே நேரத்தில் கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளை அள்ளிக் கொடுப்பதில் எந்த சிரமமும் ஒன்றிய அரசுக்கு இல்லை. கடன் தள்ளுபடி, வரிவிலக்கு போன் றவை தாராளமாக வழங்கப்படுகிறது.
கார்ப்பரேட்டுகளுக்கு பலி கொடுக்கும் கொள்கை
வேளாண்துறையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் இத்தகைய போக்குதான் கடைப் பிடிக்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயப்படுத்தப்படுகின்றன. இதுவும் காங்கி ரசால் துவக்கி வைக்கப்பட்டதுதான். அதை தீவிர மாக பாஜக அமல்படுத்துகிறது. இத்தகைய பிரச்ச னைகளில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் ஒரே நிலைப்பாடுதான் உள்ளது. இதில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகூட இல்லை. இதன் விளை வாக நமது நாட்டில் உள்ள ரயில்வேயில் உள்ள ட்சக்கணக்கான காலியிடங்களை நிரப்ப ஒன்றிய அரசு முன்வரவில்லை. பிஎஸ்என்எல் கார்ப்ப ரேட்டுகளுக்காக பலிகொடுக்கும் கொள்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது. சங்பரிவார் நிகழ்ச்சி நிரலின்படி, கல்வித் துறையை நவீனமயமாக்க ஒன்றிய அரசு முயற்சிக் கிறது. வகுப்புவாத விஷத்தை புகுத்தி புதிய தலைமுறையின் சிந்தனையை திசை திருப்பவே இந்த நடவடிக்கை என முதல்வர் குறிப்பிட்டார். பொதுக்கூட்டத்துக்கு சங்கத்தின் அகில இந்திய தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் விஜூ கிருஷ்ணன், துணை தலைவர் ஹன்னன் முல்லா, விவசாய தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய தலை வர் ஏ.விஜயராகவன் உள்ளிட்டோர் பேசினர்.