தஞ்சாவூர், பிப்.27- திருவையாறு சுற்று வட்டாரப் பகுதி களில், தண்ணீரின்றி காய்ந்து வரும் சம்பா பயிரை காப்பாற்ற, ஆழ்துளைக் கிணறு உள்ளவர்களிடம், இரவல் தண் ணீரை வாங்கி, பயிரை காப்பாற்ற விவ சாயிகள் போராடி வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்ட பாச னத்திற்கு, மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஆண்டு (2022) மே 24-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு, இந்த ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி வழக்கம் போல் மூடப்பட்டது. ஆனால், குறுவை சாகுபடியின் போது மழை குறுக்கீடு செய்ததால், அப்போது அறுவடை காலம் தள்ளிப் போனது. இதனால், மீண்டும் சம்பா, தாளடி நடவு காலமும் தள்ளிப் போனது. இதனால், தஞ்சாவூர் மாவட்டம் திரு வையாறு சுற்றுவட்டாரப் பகுதியான திங்களூர், பெரும்புலியூர், தில்லைஸ் தானம், ராயப்பேட்டை, காருக்குடி, ஈச்சங்குடி போன்ற கிராமங்களில், சுமார்
ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர் கள் தண்ணீர் இன்றி வயல்கள் வெடித்து காணப்படுகிறது. கதிர் வருவதிலும் சிக் கல் உள்ளதால் விவசாயிகள் வேதனை யடைந்துள்ளனர். இதுகுறித்து திங்களூரை சேர்ந்த விவசாயி ராஜேஷ் கூறுகையில், ‘‘மேட் டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால், குறுவை சாகுபடியை காவிரி பாசன நீரைக் கொண்டு சாகுபடி செய்தோம். ஆனால் அறுவடை காலம் நீடித்ததால், தாளடி நடவும் கால தாமதம் ஏற்பட்டது. தற்போது, 100 நாட்களான நெற் பயிர் வளர்ந்து கதிர் விடும் சூழலில், தண்ணீர் இல்லாமல் காய்ந்து வரு கிறது. கடந்த மாதம் முழுவதும் மழை பெய்து கெடுத்தது. தற்போது வறண்டு போய் வயல் வெடிக்கத் தொடங்கியுள் ளது. மேட்டூரில் இருந்து இன்னும் இரண்டு வாரங்களுக்கு தண்ணீர் விட்டால் மட்டுமே காய்ந்து வரும் பயிரை காப்பாற்ற முடியும். ஏக்கருக்கு 35 ஆயிரம் வரையில் செலவு செய்துள்ளதால், பயிரை காப் பாற்ற வேண்டும் என்ற சூழலில், அக்கம் பக்கத்தில் ஆழ்துளைக் கிணறு உரிமை யாளர்களிடம், தண்ணீரை காசு கொடுத்து இரவலுக்கு வாங்கி வயலுக்கு பாய்ச்சி வருகிறோம். இருப்பினும், எங்கள் பகுதியில் ஏரி, குளங்களில் தண்ணீர் இல்லாத சூழ லில், ஆழ்துளைக் கிணற்றிலும் தண்ணீர் முழுமையாக வருவது இல்லை. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், இரண்டு நாளுக்கு தண் ணீர் விட்டாலும், பயிர்கள் காய்ந்து விடுவது வேதனையாக உள்ளது’’ எனத் தெரிவித்தார்.