tamilnadu

img

நெய்வேலியில் உரிய இழப்பீடு வழங்குக!

முதலமைச்சரிடம்  தோழமை கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 10- நெய்வேலியில் நிலம் கையகப் படுத்தும் போது பாதிக்கப்படும் விவசாயக் கூலித் தொழி லாளர்கள், சிறுவியாபாரி களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என   முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னை நேரில் சந்தித்துதோழமை கட்சித் தலைவர்கள்  வலியுறுத்தி னர். பின்னர் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நெய்வேலியில் என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்கள் பிரச் சனை குறித்து முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினோம். நெய்வேலி நிறுவனத்தைச் சுற்றி யுள்ள ஏறக்குறைய 26 கிராம மக்க ளை அப்புறப்படுத்தி அந்த நிலங் களைக் கையகப்படுத்து வதற்கான நடவடிக்கையை நெய்வேலி நிறுவனம் மேற் கொண்டு வருகிறது. இதனால் அந்த மக்கள் தங்கள் வாழ் விடங்களையும், வாழ்வாதா ரத்தையும் இழந்து துயரில் ஆழ்ந்துள்ளனர்.

வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் பலகட்ட பேச்சு வார்த்தை நடத்தி விவசாயி களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கக் கூடிய வகையில் சில  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்துக் கட்சிகள் சார்பில்  நெய்வேலியில் பல போராட்டங் கள் நடைபெற்றன. அதன் விளை வாக நடைபெற்ற பேச்சுவார்த்தை யில், நிலம் கொடுத்த விவசாயி களுக்கு ஏக்கருக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கப்படவேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கை கள் ஏற்கப்பட்டுள்ளன. ஆனால் நிலம் வழங்கிய விவ சாயிகளுடைய குடும்பங்களின் இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் நிறை வேற்றப்படவில்லை. மேலும் ஒரே  இடத்தில் பட்டா நிலம் வைத் திருப்பவர்களுக்கு வழங்கக் கூடிய இழப்பீட்டில் வேறுபாடு உள்ளது. அந்த வேறுபாட்டை நீக்கி அனைவருக்கும் வேறு பாடு இல்லாமல் இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல் நிலம் இல்லாத விவசாயக் கூலித் தொழி லாளர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்டவர்களை வெளியேற் றும் போது, அவர்களின் வாழ்வா தாரத்தைப் பாதுகாக்கும் வகை யில் நியாயமான உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு நிலம் வழங்கி யவர்களுக்கு இன்னும் முழுமை யான இழப்பீடுவழங்கவில்லை. காவல்துறை மூலம் கட்டாயப் படுத்தி விவசாயிகளை வெளி யேற்றக் கூடாது. அவர்களுடைய கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றிய பிறகே அவர் களை அங்கிருந்து அப்புறப் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை முதல்வரிடம் வலியுறுத்தி னோம். அவரும் கோரிக்கை களை ஏற்றுக் கொண்டார்.   தமிழ்நாடு அரசால் முடிந்த வரைத் தலையிட்டு பிரச்சனை களைத் தீர்த்துள்ளோம் என்றும்,  இந்த கோரிக்கைகள் குறித்து ஒன்றிய அரசுக்கு விரிவான கடிதம் எழுதுவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.  நெய்வேலி நிறுவனத்தின் தலைவர்களோடு அமைச்சர் கள், அதிகாரிகள் மூலம் பேச்சு வார்த்தை நடத்தி மற்றகோரிக்கை களையும் நிறைவேற்ற நட வடிக்கை எடுக்கிறோம் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். அவர் அளித்துள்ள வாக்குறுதி யின் படி இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நம்பு கிறோம். முன்னதாக முதலமைச்சரைத் தலைவர்கள் சந்தித்தபோது வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பி னர் க.கனகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.