தஞ்சாவூர், ஜன.23 – சம்பா நெல் கொள்முதலில் நிரந்தரமாக 22 சதவீத ஈரப்பதம் என்பதை அமல்படுத்த வேண்டும் என்று தஞ்சாவூருக்கு வந்த நிபுணர் குழுவிடம் விவசாயிகள் வலி யுறுத்தினர். டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யும் நெல் மணிகள் அதிக ஈரப்பதத்தில் உள்ளன. மேக மூட்டம், மழைப்பொழிவால், நெல்லை உலர வைப்பதில் மிகுந்த சிரமத்தை விவசாயிகள் சந்தித்து வருதால், 17 சதவீதம் ஈரப்பதம் என்ற அளவில் நெல் கொள்முதல் செய்வ தில் தளர்வு செய்து 22 சதவீதம் ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் அனுப்பியது. இதையடுத்து, ஒன்றிய அரசின் சார்பில் இந்திய உணவுத்துறை யின் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரி வைச் சேர்ந்த உதவி இயக்குநர்கள் நவீன், பிரீத்தி, தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல், அபிஷேக் பாண்டே ஆகியோர் அடங்கிய குழுவினர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் ஈரப்பதம் குறித்து புதன்கிழமை யன்று ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்டமாக தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கக்கரை, புதூர், தெலுங்கன் குடிக்காடு, புலவன்காடு, பாப்பா நாடு ஆகிய பகுதியில் உள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல்லில் இருந்து ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும், நான்கு நெல் மாதிரிகளை சேக ரித்து, விவசாயிகளிடம் விசாரித்தனர். ஆய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் ஆ.அண்ணாதுரை, ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தஞ்சாவூர் முதுநிலை மண்டல மேலாளர் (பொ) கார்த்திகை சாமி, வேளாண்மை துறை இணை இயக்குனர் வித்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதில், கக்கரை கிராமத்தில் ஒன்றிய நிபுணர் குழுவினரை விவ சாயிகள் சந்தித்தனர். அப்போது, வடகிழக்கு பருவமழையால் லட்சக்கணக்கான ஏக்கர் நெற் பயிர்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. இயற்கை பேரிடர்களில் இருந்து பயிரை காப்பாற்றுவது கடினமாக உள்ளது. வங்கி, கந்துவட்டி என பல கடன்களையும், நகைக்கடன் பெற்று சாகுபடிக்கு முதலீடு செய்கிறோம். காரீப் பருவத்தில், ஒவ்வொரு ஆண்டும் பனி மற்றும் மழை போன்ற காரணங்களால் நெல் கொள்முதலில் ஈரப்பதம் என்பதை ஒன்றிய அரசு நிரந்த ரமாக 22 சதவீதமாக அமல்படுத்த வேண்டும். ஒன்றிய அரசு விவசாயி களுக்கு நிவாரணம் வழங்க போதிய நிதியை பாரபட்சம் காட்டா மல் தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் ஆ.அண்ணாதுரை செய்தி யாளர்களிடம் கூறுகையில், டெல்டா மற்றும் இதர மாவட்டங் களில், நெல் கொள்முதலில் ஈரப்பதத்தை அதிகரிப்பது தொடர்பாக, ஒன்றிய அரசின் நிபுணர் குழு ஆய்வு செய்கின்றது. 17 சதவீதத்திற்கு குறைவாகவும் நெல்லை வழங்க விவசாயிகள் தயாராக உள்ளனர். ஆனால், ஜன வரியில் மழை மற்றும் பனிப் பொழிவு போன்ற சீதோஷ்ண நிலையால், 22 சதவீத ஈரப்பதத்தில் நெல்லை கொள்முதல் செய்ய நிபுணர் குழுவிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளின் கருத்துக்களை ஏற்று, ஒன்றிய அரசின் அறிக்கை விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் என நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர். 80 நெல் மாதி ரிகளை சேகரிக்க உள்ளனர். தமிழ கத்தில், 5.76 லட்சம் டன் நெல் இது வரை கொள்முதல் செய்யப் பட்டுள்ளது என்று தெரிவித்தார்.