tamilnadu

img

மணப்பாறை மாட்டுச் சந்தையில் கட்டண கொள்ளை: தடுத்து நிறுத்தக் கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மணப்பாறை மாட்டுச் சந்தையில் கட்டண கொள்ளை: தடுத்து நிறுத்தக் கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சி புறநகர் மாவட்டம் மணப்பாறையில் புகழ்பெற்ற மாட்டுச் சந்தையில், அராஜக முறையில் அதிகக் கட்டணம் வசூல் செய்வதைக் கண்டித்தும், இந்த கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டியும், கால்நடைகளுக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்த கழிப்பிட வசதி, மின்விளக்குகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்  மணப்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், விவசாய சங்க பகுதிச் செயலாளர் சீனிவாசன், சிஐடியு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் நவமணி ஆகியோர் பேசினர். இதில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் நகராட்சி அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டது.