tamilnadu

img

குஜராத் இனப் படுகொலை - விஎச்பி முன்கூட்டியே திட்டமிட்டது

எதிர்பார்த்த முடிவுதான்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு நான்  எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மதச்சார்பின்மையின் மீது நம்பிக்கை கொண்ட கமல்ஹாசன் எடுத்துள்ள முடிவு நான் எதிர்பார்த்தது. அவருக்கு நான் கடமைப்  பட்டிருக்கிறேன். கமல்ஹாசன் ஆதரவளிப்பார் என்று எனக்குத்  தெரியும். ஏனென்றால், இயற்கையிலேயே அவர் மதச்சார்பின்மை யின் மீது நம்பிக்கை கொண்டவர். எனவே, கண்டிப்பாக திமுக கூட்டணிக்கு அவர் ஆதரவளிப்பார் என்று நான் எதிர்பார்த்தேன். அதையே அவரும் செய்திருக்கின்றார். அவருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர்  ஈவிகேஎஸ் இளங்கோவன்

‘கமலின் தீவிரத்தன்மை’

இன்றிருக்கும் அரசியல் சூழலில் மதவாத சக்திகள் முழு பலத்துடன் எதிர்க்கப்பட வேண்டியவைகள் என்பதை கருத்தில் கொண்டு நிபந்தனையற்ற ஆதரவை மக்கள் நீதி மய்யம்  வழங்கியிருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையும், இறை யாண்மையும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டதை முற்றிலும்  உணர்ந்து மதவாத, வகுப்புவாத சக்திகளை வீழ்த்த வேண்டுமென்ப தில் கமல்ஹாசனுக்கு இருக்கிற தீவிரத்தன்மையை மனதார பாராட்டுகிறேன், வரவேற்கிறேன்.

கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்

சிபிஐ நன்றி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவின் கூட்டணி தர்மம் காப்பாற்றப்பட்டுள்ளது. கூட்டணி கட்சி வேட்பா ளரை மநீம ஆதரித்து இருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வர வேற்கிறது. கமல்ஹாசனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.'

சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்

அன்புமணியின் கடிதம்

என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட வுள்ள நிலங்கள் அனைத்தும் முப்போகம் விளையக்கூடி யவை. ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டித்தரக் கூடி யவை. அதனால், அந்த நிலங்களை விட்டுத் தர உழவர்கள்  விரும்பவில்லை. என்எல்சி தரப்பிலும், கடலூர் மாவட்ட நிர்வாகத்  தின் தரப்பிலும் இதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்  ளப்பட்ட போதிலும் கூட, அவை எதுவும் வெற்றிபெறவில்லை. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் ஒன்றிய அரசின் பணமாக்குதல் (National Monetisation Pipeline) திட்டத்தின் கீழ் என்எல்சி நிறுவனம், அடுத்த இரு ஆண்டுகளில், அதாவது 2025ஆம் ஆண்டுக்குள் தனியாருக்கு விற்பனை செய்யப்  படவிருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணுக்கு தெரியும் தொலைவில் என்எல்சி நிறுவனம் தனியார்மயமாக்கப்படும் என்று தெரிந்தே, அந்த நிறுவனத்திற்கு உழவர்களின் நிலங்களை பறித்துத் தருவது நியாயமல்ல.

முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் பாமக தலைவர்  டாக்டர் அன்புமணி ராமதாஸ்

 

தீக்கதிர் முக்கிய செய்திகள் 


ஜனவரி 31 நாடாளுமன்றம் கூடுகிறது

பிப்.1 பட்ஜெட் தாக்கல்

புதுதில்லி, ஜன.25-  2023-24 ஆண்டின் முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் ஜனவரி 31-ஆம் தேதி கூடுகிறது. முதல் நாள் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலை வர் திரௌபதி முர்மு உரை யாற்றுகிறார். பின்னர் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். பிப்ரவரி 1-ஆம் தேதி  2023 -2024ஆம் ஆண்டுக் கான நிதி நிலை அறிக்கை யை நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல்  அமர்வு ஜனவரி 31 முதல்  பிப்ரவரி 13 வரை நடை பெறுகிறது. இரண்டாவது அமர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெறுகிறது.

அனைத்துக் கட்சிகளுக்கு அழைப்பு

பட்ஜெட் கூட்டத் தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பையும் கோரி யுள்ள ஒன்றிய அரசு ஜன.30 அன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. 

1091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் இன்று வெளியீடு!

புதுதில்லி, ஜன. 25 - “நாட்டில் தற்போது சட்டங்கள் ஆங்கிலத்தில் உள்ளன.  இதனை 99 சதவிகித மக்கள் எளிதாக புரிந்து கொள்ள  முடியவில்லை. மக்கள் தாங்கள் என்ன மொழியில் பேசு கிறார்களோ அந்த மொழியில் சட்டங்களை புரிந்து கொள்ள வேண்டும். எனவே, முதற்கட்டமாக இந்தி, தமிழ்,  குஜராத்தி, ஒடியா ஆகிய 4 மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்பட உள்ளன” என்று உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்திருந்  தார். அதன்படி நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு முதற்கட்டமாக 1091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள், தமிழ்  உள்ளி ட்ட அதிகாரப்பூர்வ மொழிகளில் இன்று வெளியிடப்படுகின்றன.

பிற மொழிகளை அழிக்கப்பார்க்கிறது பாஜக

முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

திருவள்ளூர், ஜன.25-  திருவள்ளூர் மாவட்ட திமுக  சார்பில் திருவள்ளூரில் மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த  பொதுக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.  அப்போது உரையாற்றிய அவர்,  ‘‘தமிழுக்காக உயிர்நீத்தவர்கள்தான் மொழிப்போர் தியாகிகள். தங்களின் தேக்கு மர தேகத்தை தீயால் எரித்துக் கொண்டவர்கள்தான் மொழிப்போர் தியாகிகள். தியாக வரலாற்றை மீண்டும் மீண்டும் சொல்வது, தமிழி னம் தாழ்ந்துவிடக் கூடாது என்ப தற்காகத்தான்.  உலகம் முழுவதும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வலம்வர இரு மொழிக் கொள்கையே காரணம். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி யை வைத்து பிற மொழிகளை அழிக்கப்பார்க்கிறது பாஜக. இந்தி மொழியை திணிப்பதை தனது வழக்  கமாக கொண்டுள்ளது பாஜக. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடரும்’’ என கூறினார்.

நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி

சென்னை,ஜன.25- கன்னியாகுமரியில் திருவட்டார் அருகேவுள்ள மணக்காவிளையைச் சேர்ந்தவர் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.  உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இவர் வீட்டில் இருந்த வாறு சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில், உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதை அடுத்து கன்னியா குமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் நாஞ்சில் சம்பத் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முதல்வர் நலம் விசாரிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடல் நலக்குறைவால் ஆசாரிப்பள்ளம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாஞ்சில் சம்பத்தின் உடல்நலம் குறித்து அவரது மகன் மருத்துவர் சரத் பாஸ்கரிடம் தொலை பேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். மேலும், அமைச்சர் மா.சுப்பிர மணியன், நாகர்கோவில் மாநக ராட்சி மேயர் ஆர்.மகேஷ் இருவரை யும் தொடர்பு கொண்டு நாஞ்சில் சம்பத்திற்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்கு தேவை யான உதவிகளை செய்திடுமாறு அறிவுறுத்தினார்.

தென்கிழக்கில் உருவாகிறது காற்றழுத்தப் பகுதி

சென்னை,ஜன.25- சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறி யிருப்பதாவது:- பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு குறைந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 27 ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதி களில் உருவாகக்கூடும். இது, அடுத்த 3 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதனால், 26, 27 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச் சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 28, 29 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்க ளில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்  ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வங்கிகள் 5 நாட்கள் செயல்படாது

சென்னை,ஜன.25- பழைய ஓய்வூதியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வருகிற ஜன.30 மற்றும் 31 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. அன்றைய தினங்களில் தமிழ் நாடு முழுவது முள்ள அனைத்து பொது வங்கிகளும் இயங்காது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது .  அத்துடன் குடியரசு தினத்தை முன்னிட்டு வங்கிகளுக்கு ஜன.26 அன்று அரசு விடுமுறை விடப்பட் டுள்ளது. வரும் 28 ஆம் தேதி, 4வது சனிக்கிழமை என்பதாலும், அன்றைய தினமும் மறுநாள் 29 ஆம் தேதி ஞாயிற்று க்கிழமை என்பதாலும் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை நாளாகும்.இடையில் ஜன.27 வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் வங்கிகள் செயல்படும்.

உணவு டெலிவரி பெயரில் ஏமாற்றி பணத்தை பறிக்கும் மோசடி கும்பல்

சென்னை,ஜன.25- செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கேட்டுப் பெற்று பணத்தை பறிக்கும் வட மாநிலத்தவர்கள் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் பிரபலமான உணவு டெலி வரி நிறுவனங்களின் பெயரைச் சொல்லி பொதுமக்களின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசும் வடமாநில வாலி பர்கள் உங்கள் செல்போன் எண்ணில் இருந்து உணவு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்று கூறி வலை விரிக்கிறார்கள்.  எதிர்முனையில் பேசும் பொதுமக்கள், நாங்கள் உணவு ஆர்டர் செய்யவில்லையே என்று கூறியதும்... என்ன சார் இப்படி சொல்றீங்க... உங்கள் செல்போனில் இருந்து தானே ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இப்படி சொன்னால் எப்படி? என்று எதிர் கேள்வி கேட்கும் வடமாநில வாலிபர் சரி... உணவை நான் கேன்சல் செய்து கொள்கிறேன். உங்கள் நம்பருக்கு ஓ.டி.பி.  வரும் அதை சொல்லுங்கள் என்பார்.  அதேபோன்று சம்பந்தப்பட்ட நபரின் சொல்போனுக்கு ஓ.டி.பி. எண் வந்ததும் எதிர்முனையில் பேசிக் கொண்டு இருக்கும் வட மாநில வாலிபர் அதனை கூறுமாறு சொல்வார். ஓ.டி.பி. எண்ணை சொன்ன அடுத்த நொடியே வங்கி கணக்கில் இருந்து பணம் பறி போயுள்ளது. இப்படி ரூ.20 ஆயிரம் ரூபாயை ஒருவர் பறி கொடுத்து விட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள் ளனர்.  இதையடுத்து சைபர் கிரைம் காவலர்கள் பொது மக்களை உஷார்படுத்தி உள்ளனர். உங்கள் செல்போனுக்கு இதுபோன்று யாராவது தொடர்பு கொண்டு பேசினால் அதனை கண்டு கொள்ளாமல் தொடர்பை துண்டித்து விடுங்கள். அதுதான் நல்லது. இல்லையென்றால் நீங்கள் பணத்தை இழப்பது உறுதி என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எப்போதுமே தேவை யில்லாமல் வரும் அழைப்புகளை உதா சீனப்படுத்தி விடுவதுதான் நல்லது என்றும்  சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை  செய்திருக்கிறார்கள்.

எகிப்து அதிபருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு!

தில்லியில் இன்று நடைபெறும் குடியரசு தின  விழாவின் தலைமை விருந்தினராக பங்கேற்க எகிப்து  அதிபா் எல்-சிசி செவ்வாயன்று தில்லி வந்தடைந்தார். மூன்று  நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துளள்ள பத்தா எல்-சிசியுடன் 5 அமைச்சா்களும், மூத்த அதிகாரிகளும் இந்தியா வந்துள்ளனா். இந்நிலையில், அவர்களுக்கு புத னன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் எகிப்து அதிபரை வரவேற்றனர்.

பிப்.17-இல் தெலுங்கானா  புதிய தலைமைச் செயலகம் திறப்பு!

டாக்டர் பி.ஆா். அம்பேத்கரின் பெயா் சூட்டப்பட்டுள்ள, தெலுங்கானா மாநில புதிய தலைமைச் செயலக கட்டடம், முதல்வா் கே. சந்திரசேகா் ராவின் பிறந்த நாளான பிப்ரவரி 17-ஆம் தேதி திறக்கப்படுகிறது. அன்று காலை 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணிக்குள், புதிய கட்டடத்தை முதல்வா் கே. சந்திரசேகா் ராவ் திறந்து வைக்கிறார். தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின், ஜாா்க்கண்ட் முதல்வா்  ஹேமந்த் சோரன், பீகாா் துணை முதல்வா் தேஜஸ்வி, பீகாா் முதல்வா் நிதீஷ் குமாரின் பிரதிநிதியாக ஐக்கிய ஜனதா தளம் தேசியத் தலைவா் லாலன் சிங், டாக்டர் பி.ஆா்.  அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்கின்றனர்.

பத்ரிநாத் நெடுஞ்சாலைகளிலும் ஏற்பட்ட விரிசல்கள்

ஜோஷிமத் நகரம் நிலத்தில் புதைந்து வரும் விவகாரம்  தொடர்பாக பல்வேறுதுறை யினரும் ஆய்வுகளை நடத்தி வரும் நிலையில், பத்திநாத் தேசிய நெடுஞ்சாலையிலும் விரிசல்கள் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்ரிநாத் மற்றும் மனா  பகுதிகளுக்கு செல்வதற்கு பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை மட்டுமே ஒரே வழியாக உள்ளது. இந்நிலையில், அதில்  விரிசல் ஏற்பட்டுள்ளது. இது மழை மற்றும் பனிக்காலங் களில் வழக்கமாக ஏற்படுவதுதான் என்றும், சாலையின் நிலப்பரப்பு சற்று தளர்வாக இருப்பதால் இந்த விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம் நிலப்புதைவுக்கு முன்பு ஜோஷிமத்திலும் இதே போலத்தான் ஏற்பட்டது என்றும் மக்கள் கூறுகின்றனர்.

தேர்தல் வெற்றிக்காகவே மக்களிடையே வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது

“நாட்டில் மக்களிடையே வெறுப்புணர்வு பரப்பப்படு கிறது. இந்த அணுகுமுறை நாட்டையும், மக்களையும் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லாது. அது அழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும். எனது சகோ தரர்கள் (காஷ்மீரி பண்டிட்கள்) இந்த இடத்தை (காஷ்மீரை)  விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. நான் மரணிப்ப தற்கு முன் அவர்கள் மீண்டும் அவர்களின் வீடுகளுக்கு மரியாதையுடன் வரும் சூழ்நிலை ஏற்பட வேண்டும் என்பது  எனது விருப்பம்” என்று முன்னாள் முதல்வரும், தேசிய  மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

தில்லி மதுபான முறைகேடு: ரூ. 72 கோடி சொத்து பறிமுதல்

தில்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர் பாக சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புகள்  விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி மூத்தத் தலைவரும், தில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, தெலுங்கானா முதல்வரின் மகளும், எம்.எல்.சி.யுமான கவிதா ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆம் ஆத்மி கட்சியின் தகவல்தொடர்புத்துறை பொறுப்பாளர் விஜய், மதுபான நிறுவனங்களின் தொழிலதிபர்கள் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வர்களின் ரூ. 72 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

உ.பி. மாநிலத்தில் கொத்தடிமையாக இருந்த 11 சிறுவர்கள் மீட்பு!

உத்தரபிரதேசத்தின் சந்தவுலி மாவட்டத்தில் உள்ள தீன்தயாள் உபாத்யாய் ரெயில் நிலையத்தில் 11 சிறுவர்கள்  உள்பட 21 பேர் சுற்றி திரிந்து உள்ளனர். அவர்களை கவனித்த ரயில்வே பாதுகாப்பு போலீசார் மீட்டு விசாரித்தபோது, அவர்கள் வாரணாசி மாவட்டம் லோத்தா பகுதியில் ரயில் தண்டவாளத்திற்கான ஸ்லீப்பர் கட்டை உற்பத்தி ஆலையில் சம்பளமே இல்லாமல் கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்த தக வலை தெரிவித்துள்ளனர். தற்போது அங்கிருந்து தப்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளன. இதையடுதது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அந்த சிறுவர்களை போலீசார் மீட்டுள்ளனர்.

 

தீக்கதிர் விரைவு செய்திகள்

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நான் தான் சவாலாக இருக்கப் போகிறேன் என்று குதித்திருக்கிறார் சீமான். ஜனவரி 29 அன்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப் போவதாகவும் நான் தான் வலிமையானவன் என்றும் பிதற்றியிருக்கிறார்.

சமத்துவ மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம், யாருக்கும் ஆதரவு தர வேண்டாம் என்று கூறிவிட்டதாக ஒதுங்கிக் கொண்டிருக்கிறார் அதன் தலைவர் சரத்குமார்.

ஈரோடு தேர்தல் தமிழக அரசுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறாராம் சசிகலா. அது எந்த மாதிரியான தாக்கம் என்பதை பொறுத்திருந்து பார்க்கப் போகிறாராம்.