tamilnadu

ஆடியோ போலியானது

சென்னை, ஏப்.23- தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராஜன் தில்லி செய்தி யாளர்களிடம் பேசியதாக கூறி 26 விநாடி கள் கொண்ட ஒரு ஆடியோ வெளியாகி சமூக  வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இதில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஆகியோர் இணைந்து ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளனர். இந்த தொகையை அவர்களது முன்னோர்கள் கூட  சம்பாதிக்கவில்லை. இவ்வளவு பெரிய தொகையை அவர்கள் இருவரும் எப்படி கையாளப் போகிறார்கள்? என்று உள்ளது. இந்த ஆடியோ வெளியானதை அடுத்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பாய்ந்தனர். இந்த நிலையில் ஆடியோவுக்கு மறுப்பு  தெரிவித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைதளத்தில் என் மீது வைக்கப் படும் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை. நான் அமைச்சரவையில் ஒதுக்கப்பட்டுள்ள இலாகாவில் கூடுதல்  கவனம் செலுத்தி வருகிறேன்.

எனது பொது வாழ்வில் நான் செய்த அனைத்து  விசயங்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆலோசனையின்பேரில் மட்டுமே அமைந்துள்ளன. எங்களை பிரிப்பதற்காக எந்த ஒரு நாசவேலையை செய்தாலும் வெற்றி பெறாது. அந்த ஆடியோ முழுக்க  முழுக்க போலியானது. அதற்கு தொழில் நுட்ப ரீதியாக என்னிடம் ஆதாரம் உள்ளது. 26 நொடிகள் ஓடும் அந்த ஆடியோவில் முதல் சில விநாடிகள் வேறொரு கிளிப்பில்  இருந்து எடுக்கப்பட்டது. எஞ்சிய உரை யாடலில் குரல் தெளிவாக இல்லை.  வேண்டும் என்றே சப்தம் குறைக்கப்பட்டுள் ளது. அதுவும் தவிர இந்த தொலைபேசி அழைப்பில் பின்னணி சத்தம் எதுவும் இடம்பெறவில்லை. எனவே நான் பேசிய தாக வெளியான ஆடியோ போலியானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்திலும் அவர் விரிவான விளக்கத்தை படங்களுடன் விளக்கி உள்ளார்.