சென்னை, ஏப்.1- காவிரி - குண்டாறு இணைப்பு நடந்தே தீரும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரி வித்தார். வெள்ளக்காலங்களில் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் உபரி நீரை வறண்ட பகுதிக்கு கொண்டு வரவேண்டும் என்று 100 ஆண்டுக ளுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த நிலையில்தான் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாத புரம், விருதுநகர் மாவட்டங்களுக்கு திருப்பி விடுவதற்காக 262 கிலோ மீட்டருக்கு கால்வாய் வெட்டும் ரூ.14 ஆயிரம் கோடியிலான காவிரி -தெற்கு வெள்ளாறு-வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் உருவாக் கப்பட்டது. அதன்பிறகு, 1933 ஆம் ஆண்டில் மாயனூரில் தென்துறைக் கால்வாய் துவங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1958 ஆம் ஆண்டில் ரூ.189 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்து முதலமைச்சர் காமராசர் அடிக்கல்லை நாட்டினார். அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த முதல்வர் கருணாநிதி மற்றும் முந்தைய அதிமுக அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்தது. இத்திட்டத்துக்கென நிலங்களை அளவீடு செய்வது, கையகப்படுத்துவது போன்ற பணி களை மேற்கொள்வதற்காக அலுவல கங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த திட்டத்தின் பணிகளை மாயனூர் கதவணை முதல் வெள்ளாறு வரை, தெற்கு வெள்ளாறு முதல் வைகை ஆறு வரை, வைகை முதல் குண்டாறு வரை என மூன்று கட்டங்க ளாக செய்வது என்றும் முடிவு செய்தனர். இதற்காக கரூர் மாவட்டத்தில் 4.10 கி.மீட்டருக்கு ரூ.171.கோடி, திருச்சி - புதுக்கோட்டை 5.355 கி.மீ ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கப்பட்டன. இந்த திட்டம் அமலுக்கு வந்தால் 15 ஆறுகள் இணைப்பு ஏற்படும். 1054 ஏரிகள் நீர் நிரம்பும், சாகுடிக்கு 50 லட்சம் விவசாயி கள் பயனடைவார்கள். அத்துடன் 6,300 மில்லியன் கன அடி தண்ணீர் கொண்டு செல்ல வாய்ப்புள்ள மிகப் பெரிய திட்டமாகும்.
இந்நிலையில் இந்தத் திட்டம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் சனிக்கிழமையன்று (ஏப்.1) கவன தீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய அதிமுக உறுப்பினர் விஜய பாஸ்கர்,“இந்த திட்டத்தை கொண்டு வருவதற்காக ஆட்சியில் இருந்து முதல்வர்கள் எடுத்து நடவடிக்கை களையும் திட்டத்தின் நோக்கத்தையும் சுட்டிக்காட்டினார். மேலும் கூடுதல் நிதி ஒதுக்கி விரைந்து முடிக்க வேண்டும் ” என்று வலியுறுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மா. சின்னதுரை பேசுகையில், “புதுக்கோட்டை மாவட்ட மக்களின் மிக நீண்டநாள் கோரிக்கையான காவிரி-குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற 1958 ஆம் ஆண்டு காமராசர் அடிக்கல்லை நாட் டினார். ஆனாலும், கலைஞர் முதல மைச்சராக வந்த பிறகுதான் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை புதுக்கோட்டை மக்களுக்கு ஏற் பட்டது. அதன்பிறகு, அதிமுக ஆட்சியின் போது திட்டத்தை துவக்குவதாக அறிவித்தது. ஆனாலும், ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், தற்போது பணிகள் மீண்டும் துவங்கியுள்ளது. இப்பணிகள் விரைந்து முடிக்கப் பட்டால் 7 மாவட்ட மக்கள் பயனடை வார்கள்” என்றார். இதற்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்கையில் கூறியதாவது:-
காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்காக முதன்முதலில் கதவணை கட்ட நிதி ஒதுக்கியவர் கருணாநிதி. அந்த கதவணையைக் கட்டியது நான் தான். 2008 ஆம் ஆண்டு கருணாநிதி இதற்கான ஆணையைப் பிறப்பித்தார். 2009 ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் 2020 ஆம் ஆண்டு நில எடுப்பு பணிக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 34 கோடி தான் செலவு செய்யப்பட்டது. 71 ஏக்கர் நிலம் தான் எடுக்கப்பட்டது. திமுக ஆட்சி வந்த பிறகு 2 ஆண்டுகளில் நில எடுப்பு பணிக்கு ரூ.300 கோடியை திமுக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 690 ஏக்கர் நிலங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது ரூ.554 கோடி நிதி நில எடுப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கால்வாய் வெட்டும் பணி நடைபெற வில்லை. திமுக ஆட்சியில் ரூ.177 கோடி கால்வாய் வெட்டும் பணிக்கு செலவு செய்யப்பட்டுள்ளது. 64 விழுக்காடு கால்வாய் வெட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது. திமுக ஆட்சியில் காவிரி - குண்டாறு இணைப்பு நடந்தே தீரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.