ஜெயங்கொண்டம் பகுதியில் கொட்டப்படும் காலாவதியான மருத்துவக் கழிவுகள்
அரியலூர், மே 8- ஜெயங்கொண்டம் பகுதியில் சாலை யோரத்தில் தொடர்ந்து கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சா லையில் சின்னவளையம் மேம்பாலத்தின் சர்வீஸ் சாலை ஓரத்தில் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் சமூக விரோதிகள் சிலர் காலாவதியான மருத்துவ கழிவுகளை ஆங்காங்கே கொட்டிவிட்டு சென்றுவிட்டனர். மேலும் பெரியவளையம் செல்லும் பாதையில் சாலையின் ஓரத்தில் மழை நீர் வடிகால் வாய்க்காலில் காலாவதியான மருந்து மற்றும் மாத்திரைகள், உடைந்த கண்ணாடி துண்டுகள், இறைச்சி கழிவுகள், உடைக்கப்பட்ட சாராயப் பாட்டில்கள் ஆகி யவை கொட்டப்பட்டிருப்பதால் அப்பகுதி யில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வரலாற்று சிறப்புமிக்க பொன்னேரி மற்றும் பெரியவளையம் பகுதியில் மூட்டை மூட்டை யாக மருத்துவக் கழிவுகளை கொட்டி அசுத்தப்படுத்தியிருந்தனர். தற்போது சின்ன வளையம் சர்வீஸ் சாலை மற்றும் பெரிய பாளையம் சாலை பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரங்களில் மருத்துவக் கழிவு களை கொட்டக்கூடாது என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்தும், மருத்துவக் கழிவு களை அகற்றுவதற்கென சில விதிமுறை களும், பாதுகாப்பு நடைமுறைகளும் இருக்கும்போது அதனை மதிக்காத சில சமூக விரோதிகள் இது போன்ற சம்பவங்க ளில் தொடர்ந்து ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடு படுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ள னர்.