tamilnadu

img

ரயிலுக்காக காத்திருக்கிறது குமுளி

சாந்தன்பாறா, டிச. 5- இடுக்கி மாவட்டத்தின் அருகில் உள்ள ரயில் நிலையமான போடி நாயக்கனூருக்கு ரயில் இன்ஜின் இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம்  வெற்றிகரமாக நடந்தது. இந்த சோதனை ஓட்டம்     தேனி யில் துவங்கி  போடியில்  நிறைவ டைந்தது. சபரிமலை பக்தர்களின் பயண வசதிக்காக குமுளி வரை   நீட்டிக்க வேண்டும் என்று  கேட்கப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசு இன்னும் அதை  செய்யவில்லை. 120 கி.மீ வேகத்தில் இரண்டாவது கட்ட  சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தேனி - போடிநாயக்க னூர் அகல ரயில் பாதையில் சிக்னல் சோதனையும் முடிந்  துள்ளது. நவம்பர் மாதம் முதல்கட்ட சோதனை ஓட்டம் தேனியில் இருந்து 10 கி.மீ வேகத்தில் இன்ஜின் போகி  மூலம் இயக்கப்பட்டது. எதிர்பாராத ரயில் ஓசையின் மகிழ்ச்சியை அப்பகுதி மக்கள் மலர் தூவி வரவேற்ற னர். பெரியகுளம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.லாசரின் தொடர்  முயற்சியின் ஒரு பகுதியாக இந்த அகல ரயில் பாதை திட்டம் சாத்தியமாகி உள்ளது.

மதுரை- போடி  மீட்டர் கேஜ் ரயில்பாதையை அகற்றி  அகல ரயில் பாதை திட்டமாக அமல்படுத்துவோம்  என  அன்றைய ஒன்றிய அரசு அறிவித்தது. ஆ னால் அந்த  பணிகள் நடைபெ றாத சூழ்நிலையில்  2011 இல்  பெரிய குளம் தொகுதிக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியை சேர்ந்த  ஏ.லாசர்   சட்டமன்ற உறுப்பினராக  தேர்வு செய்யப் பட்டார். அவருடைய தலைமையில் அப்பகுதி விவசாயி கள், வர்த்தகர்கள், தொழில் முனைவோர் என அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து ஒரு போராட்டக் குழுவை  ஏற்படுத்தினர். போராட்டக்குழு தலைவராக  ஏ. லாசர்   தேர்வு செய்யப்பட்டார். 2011 இலிருந்து இந்த போராட் டக்குழு  மக்களை திரட்டி  தொடர்ந்து போராடியது.  2013  இல் பிரதமர் மன்மோகன் சிங்கையும்   ரயில்வே அமைச்ச ரையும் சந்தித்து மனு கொடுத்தது.  இந்த தொடர் போராட்  டத்தின் விளைவாக 2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மதுரை -தேனி அகல  ரயில் பாதை  தொடங்கப்பட்டது. இம் மாத தொடக்கத்தில்  தேனி - போடி  சோதனை ஒட்டம் நடைபெற்றுள்ளது   என்ற தகவலை  முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் ஏ.லாசர் தெரிவித்தார்.