சென்னை, மே 23- 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக கடந்த வெள்ளிக்கிழமை (மே19) அறிவித்த ரிசர்வ் வங்கி, 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திரு ப்பவர்கள் மே 23 ஆம் தேதி அனைத்து வங்கிகளிலும் அதை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அல்லது வைப்பு தொகையாக செலுத்த லாம்என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக செப்டம்பர் 30 ஆம் தேதி வரை கால அவகாசமும் வழங்கப் பட்டுள்ளது. அதன்படி, 2000 ரூபாய் நோட்டு களை மாற்றும் நடவடிக்கை மே 23 அன்று தொடங்கியது. இதற்காக அனைத்து வங்கிகளிலும் ஏற்பாடு கள் செய்யப்பட்டு இருந்தன. 2000 ரூபாய் நோட்டுகள் அதிகளவு வந்தால் அவற்றை மாற்றி கொடுப்ப தற்கு ஏற்ப பணத்தை கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்று ஏற்க னவே ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி யிருந்தது. சென்னை ரிசர்வ் வங்கி கிளை யிலும் அதிகளவு பணம் இருப்பு வைக்கப்பட்டது. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர் களுக்கு வங்கிகளில் உரிய வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறி இருந்தது. அதை ஏற்று பெரும்பாலான வங்கி களில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற தனி இட வசதி உருவாக்கப் பட்டிருந்தது. சில வங்கிகளில் மக்கள் கூட்ட மாக வரலாம் என்று கருதி தனி வரிசை அமைத்து கொடுத்திருந்தனர். முதியோர்கள் வங்கிக்கு வரும் பட்ச த்தில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அறிவுறுத் தப்பட்டிருந்தது. தற்போது கோடை வெயில் உச்சத்தில் இருப்பதால் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களை வங்கிகளில் நீண்ட நேரம் காத்திருக்க செய்யக் கூடாது என்று சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வங்கிக்கு வருபவர்களின் தாகத்தை தீர்ப்பதற்கு தண்ணீர் வசதியும் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.