வங்கதேச பெண் ஊடுருவல் மற்றும் பண மோசடி விவகா ரம் தொடர்பாக அமலாக்கத் துறை கடந்த செப் டம்பர் மாதம் வழக் குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்த வழக்குத் தொடர்பாக செவ்வா யன்று ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் 17 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற் கொண்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத் தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு முதற்கட்ட வாக்குப்பதிவு புதனன்று நடைபெறவுள்ளது. அதே போல மேற்கு வங்கத்தின் 6 சட்டமன்ற தொகுதிக ளுக்கான இடைத்தேர்தலும் புதனன்று நடைபெற உள்ளது. இவ்வாறு இரண்டு மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறும் சூழலில் அமலாக் கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருப்பது பல்வேறு சந்தேகங்க ளை கிளப்பியுள்ளது. தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் மீது அவப்பெயர் ஏற் படுத்தவே ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களில் பாஜக அமலாக்கத் துறையை ஏவியுள்ளது என “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் கண்டனம் தெரி வித்துள்ளன.